விஜயகாந்த்தின் கேப்டன் டிவி மீது ஜெயலலிதா அவதூறு வழக்கு

Subscribe to Oneindia Tamil

Jaya files defamation case against Captain TV
சென்னை: தேமுதிக தலைவர் விஜயகாந்த்துக்கு சொந்தமான கேப்டன் டிவி மீது முதல்வர் ஜெயலலிதா சார்பில் அவதூறு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

சென்னை மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் முதல்வர் ஜெயலலிதா சார்பில் அரசு வழக்கறிஞர் எம்.எல்.ஜெகன் கேப்டன் டி.வி.க்கு எதிராக மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார்.

அந்த மனுவில் அவர் கூறியிருப்பதாவது,

கேப்டன் டி.வி.யில் கடந்த 11.12.2012 அன்று மதியம் 1 மணி அளவில் செய்தி ஒளிபரப்பானது. அதில், ஆட்சிக்கு வருவதற்கு முன்பு போயஸ் கார்டனில் சிறு வீட்டில் வசித்த ஜெயலலிதா முதல்-அமைச்சர் ஆன பிறகு பக்கத்து வீடுகளையெல்லாம் வாங்கி பெரிய வீடாக மாற்றினார். கிண்டியில் ஏராளமான நிலங்களை விலைக்கு வாங்கியுள்ளார். கொடநாட்டில் மிகப் பெரிய எஸ்டேட் வாங்கி அதில் தேயிலை பதப்படுத்தும் தொழிற்சாலை அமைத்துள்ளார். ஹெலிகாப்டர் தளத்தை போல கொட நாட்டிலும் அமைத்துள்ளார் என்று செய்தி வாசிக்கப்பட்டது.

இந்த செய்தி உள் நோக்கத்துடனும் முதல்-அமைச்சரின் நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் விதமாகவும் ஒளிபரப்பப்பட்டுள்ளது. எனவே, இந்த செய்தியை வாசித்த செம்மலூர் ரமேஷ், செய்தி ஆசிரியர்கள் அரவிந்தன், நாராயணன் ஆகியோர் மீது கிரிமினல் அவதூறு சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுத்து தண்டிக்க வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+