சென்னை கிரிக்கெட் மைதானத்தில் கேலரி அமைத்ததில் முறைகேடு: சீனிவாசன் மீது புதிய வழக்கு

Subscribe to Oneindia Tamil

Srinivasan
சென்னை: சென்னை சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில், அனுமதியின்றி பல கேலரிகளை அமைத்தது தொடர்பாக, சீனிவாசன் மற்றும் நிர்வாகிகளிடம் விசாரணை நடத்த தமிழக அரசுக்கு உத்தரவிட வேண்டும் எனக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

பாரதி கிரிக்கெட் கிளப் செயலாளர் கதிரேசன் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், கூறப்பட்டுள்ளதாவது:

சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்தில் உரிய ஒப்புதல் இல்லாமல் கேலரி என்றழைக்கப்படும் பார்வையாளர் மாடங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

இதற்கு, தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் ஸ்ரீநிவாசனும், நிர்வாகிகளும் தான் பொறுப்பு எனக் கூறியுள்ள கதிரேசன், அவர்கள் மீது தமிழக அரசு விசாரணை நடத்த வேண்டும் எனக் கோரியிருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிபதி சசிதரன், தமிழ்நாடு கிரிக்கெட் சங்கத் தலைவர் சீனிவாசன் உட்பட அதன் நிர்வாகிகள் 25 பேருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவு பிறப்பித்தார். மேலும், இந்த விவகாரம் தொடர்பாக அரசின் வணிகவரித்துறை செயலாளர் உட்பட 4 பேர், இரண்டு வார காலத்திற்குள் விளக்கமளிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார்.

ஐ.பி.எல் ஸ்பாட் பிக்சிங் விவகாரம் தொடர்பாக சிக்கலில் சிக்கியுள்ள சீனிவாசன் இப்போது கேலரி விவகாரத்திலும் சிக்கி வழக்கை சந்திக்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+