என்ன கொடுமை சார் இது....இதுக்கெல்லாமா விலக்கி வப்பாங்க....!!
வாஷிங்டன்: பள்ளி ஆண்டு விழாவுக்கு வந்த ஒரு மாணவியை வரக் கூடாது என்று பள்ளி நிர்வாகம் கூறி விட்டது. காரணம்- அந்தப் பெண்ணுக்கு மிகப் பெரிய மார்புகள் என்பதால்....!
இதனால் அந்த மாணவியும், அவரது பெற்றோரும் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இந்தக் கூத்து நடந்தது அமெரிக்காவில்.
தனது உடல் வாகு இப்படித்தான், நான் குண்டாக இருக்கிறேன், மார்புகளும் பெரிதாக இருக்கின்றன. நான் என்ன உடை போட்டாலும் கவர்ச்சியாகத்தான் இருக்கும். அதற்கு நான் என்ன செய்ய முடியும் என்று அந்த மாணவி விரக்தியாக கூறுகிறார்.
வாஷிங்டன் பிரிட்டானி
வாஷிங்டனைச் சேர்ந்தவர் பிரிட்டானி மின்டர். டீன் ஏஜ் மாணவியான இவர், அங்குள்ள பள்ளியில் படித்து வருகிறார்.
ஆண்டு விழாவுக்கு கவர்ச்சி உடையில்
பிரிட்டானி படித்து வரும் பள்ளியின் ஆண்டு விழா சமீபத்தில் நடந்தது். அதில் கலந்து கொள்வோர் கலர் கலரான உடையில் கலக்கலாக வரலாம் - உடைக் கட்டுப்பாடும் கூடவே உண்டு.
பெரும் கவர்ச்சியில் பிரிட்டானி
பிரிட்டானி சற்றே பெரிய மார்புகளுடன் கூடிய உடல் வாகுடன் இருப்பவர். அவரும் ஆண்டு விழாவுக்கு வந்தார். ஆனால் அவரது உடை அதீத கவர்ச்சியாக இருப்பதாக கூறி கேட்டோடு நிறுத்தி விட்டது பள்ளி நிர்வாகம்.
வயசு கம்மி.. கவர்ச்சி அதிகம்
இதற்கு பள்ளி நிர்வாகம் கூறிய காரணம், வயதுக்கேற்ற கவர்ச்சியுடன் பிரிட்டானி இல்லை. மாறாக அதீத கவர்ச்சியுடன் இருக்கிறார்.அவரது மார்பு கிளீவேஜ் மிகப் பெரிதாக இருக்கிறது என்று கூறி விட்டது பள்ளி நிர்வாகம்.
நல்லாத்தான் டிரஸ் பண்ணியிருந்தேன்
இதுகுறித்து பிரிட்டானி கூறுகையில், நான் நன்றாகததான் டிரஸ் செய்திருந்தேன். பள்ளி விதிமுறைகளுக்குட்பட்டுத்தான் டிரஸ் செய்திருந்தேன்.
உடல்வாகுக்கு நான் என்ன செய்ய...
எனக்கு குண்டான உடல் வாகு. மார்புகளும் பெரிதாகத்தான் இருக்கிறது. நான் என்ன உடை போட்டாலும் அது அதீத கவர்ச்சியை வெளிக்காட்டும். மார்பு கிளீவேஜும் என் வயதுடைய பெண்களை விட அதிகமாகவே இருக்கும். அதற்கு நான் என்ன செய்ய முடியும்.
கிளீவேஜ் கூடவேகூடாது
ஆனால் பள்ளி நிர்வாகமோ இந்தப் பெண்ணின் வயதுக்கு இவ்வளவு கிளீவேஜ் தெரியவே கூடாது என்று கண்டிஷனாக சொல்லி விட்டார்களாம்.
மன்னிப்பு கேளுங்க...
இதுகுறித்து பிரிட்டானியின் பெற்றோர் கேரியும், கிம்மும் அதிருப்தி தெரிவித்துள்ளனர். பள்ளி நிர்வாகம் எங்களது மகளின் சந்தோஷத்தை கெடுத்து விட்டனர். அவரை அவமதித்து விட்டனர். இதற்காக பள்ளி நிர்வாகம் மன்னிப்பு கேட்க வேண்டும் என்றனர்.