ஐபிஎல் பெட்டிங்கில் நடிகை ஷில்பா ஷெட்டிக்கும் தொடர்பு: போலீசாரிடம் தெரிவித்த புக்கீ
டெல்லி: ஐபிஎல் போட்டிகளின்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி உரிமையாளரும், நடிகையுமான ஷில்பா ஷெட்டியும் பெட்டிங்கில் ஈடுபட்டதாக தரகர் உமேஷ் கோயன்கா டெல்லி போலீசாரிடம் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் போட்டிகளின்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணி விளையாடிய ஆட்டங்களில் அணியின் உரிமையாளர்களில் ஒருவரும், நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவருமான ராஜ் குந்த்ரா பெட்டிங்கில் ஈடுபட்டதாக புகார் எழுந்தது. இதையடுத்து அவரிடம் நேற்று டெல்லி போலீசார் சுமார் 12 மணிநேரம் விசாரணை நடத்தினர். விசாரணையின்போது பெட்டிங்கில் ஈடுபட்டதை அவர் ஒப்புக் கொண்டதாக போலீசார் தெரிவித்தனர்.

அவர் தனது நண்பரும், வியாபார பார்ட்னருமான உமேஷ் கோயன்கா மூலம் பெட்டிங்கில் ஈடுபட்டது தெரிய வந்தது.
குந்த்ராவுடன் சேர்த்து உமேஷிடமும் நேற்று போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் ஷில்பா ஷெட்டிக்கும் பெட்டிங்கில் தொடர்பு உண்டு என்று தெரிவித்துள்ளார். இதனால் போலீசார் ஷில்பாவிடமும் விசாரணை நடத்தலாம் என்று கூறப்படுகிறது.












Click it and Unblock the Notifications