சில கம்பெனி பங்குகள் குறித்து டோணியிடம் விசாரணை நடத்தும் பிசிசிஐ
Subscribe to Oneindia Tamil

இது குறித்து இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் இடைக்கால தலைவர் ஜக்மோகன் டால்மியா கூறுகையில்,
டோணிக்கு எதிராக எழுந்துள்ள புகார்கள் குறித்து வாரியம் விசாரணை நடத்தும். சாம்பியன்ஸ் டிராபி போட்டிகள் நடக்கையில் அணியை தொந்தரவு செய்ய விரும்பவில்லை என்றார்.
டோணி விவகாரம் தொடர்பாக வாரிய உறுப்பினர்களிடையே இரு வேறு கருத்துகள் நிலவி வருகின்றது. ஐபிஎல் போட்டிகளில் விளையாடும் அனைத்து வீரர்களின் வங்கி கணக்குகள், வருமானம், பண பரிமாற்றம் உள்ளிட்ட விவரங்களை கேட்டு வாங்க இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் முடிவு செய்துள்ளது. மேலும் ஐபிஎல் போட்டிகள் துவங்க ஒரு மாதத்திற்கு முன்பு வீரர்கள் தங்களுடைய செல்போன் எண்களை வாரியத்திடம் அளிக்க வேண்டும்.












Click it and Unblock the Notifications