ஜெயலலிதாவை பிரதமராக்க வேண்டும்.. 77 வயது வக்கீல் உயர்நீதிமன்றத்தில் வழக்கு

அந்த வக்கீலின் பெயர் பி.ஆர்.கிருஷ்ணன். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது...:
நாட்டின் தென்பகுதிக்கு அரசியல் நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கமாகும். சுதந்திரம் பெற்ற பிறகு 62 ஆண்டுகளாக இந்தியாவின் தென் மாநிலங்களில் இருந்து குறிப்பாக தமிழகத்தில் இருந்து பிரதமர் தேர்வு செய்யப்படவில்லை. தென்பகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்கள், சந்தர்ப்பவசத்தால் வந்தார்களே தவிர, அரசியல் சாசன வழிமுறைகளின்படி வரவில்லை.
இப்படி தென்பகுதிக்கு அரசியல் அநீதி இழைக்கப்படுவதற்கு, இன்னும் நாம் ஆங்கிலேயர்களின் அமைச்சரவை மாதிரிகளை பின்பற்றுவதே காரணமாகும். இந்தியாவின் எந்தப் பகுதியில் வசிப்பவர்களுக்கும் மொழி, மாநிலம் ஆகிய எந்த பாகுபாடும் இல்லாமல் அதிகாரங்களை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதுதான் அரசியல் நீதியாக அமையும்.
ஆனால் தற்போதுள்ள ஆங்கில அமைச்சரவை மாதிரியின்படி இதற்கு வாய்ப்பில்லை. இதனால் குறிப்பாக தமிழ்நாட்டுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியல் சாசனம், அனைவருக்கும் அரசியல் நீதி கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்துள்ளது.
எனவே, ஆங்கிலேயர்களின் அமைச்சரவை முறையை பின்பற்றி, இந்தியாவின் தென்பகுதிக்கு அரசியல் அநீதியை ஏற்படுத்துவது, அரசியல் சாசனத்தின் 38-வது பிரிவை மீறுவது போன்றதாகும்.
இந்த தொடர் மீறுதல் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும். இதற்காக அரசியல் சாசன மறு சீராய்வு கமிஷனை அமைத்து, பரிசீலனை செய்து, அரசியல் சாசனத்தில் தகுந்த திருத்தங்களை கொண்டு வந்தால், அநீதி இழைக்கப்படுவது நிறுத்தப்படும். இதை நாடாளுமன்றம் செயல்படுத்த வேண்டும்.
அமைச்சரவை மாதிரியை மாற்றுவதற்கான மறுசீராய்வு கமிஷனை அமைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தைரியத்துடன் செயல்பட வேண்டும். இந்த விஷயத்தை அடுத்த பட்ஜெட் கூட்டத் தொடரில் நாடாளுமன்றம் விவாதித்து, அதற்காக என்னென்ன சட்டதிருத்தங்களை கொண்டு வரவேண்டும் என்பதற்கான முடிவுகளை எடுக்க வேண்டும்.
இதுகுறித்து நாடாளுமன்ற சபாநாயகர், மத்திய சட்டத்துறை செயலாளர், உள்துறை செயலாளர், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் ஆகியோருக்கு கடந்த மார்ச் 7-ந்தேதி மனு கொடுத்தேன்.
அதில், ‘இந்தியாவின் தென்பகுதி மாநிலத்தவருக்கும் அரசியல் சம உரிமை கிடைக்கும் வகையில் அரசியல் சாசனம் கொண்டுவரப்பட வேண்டும். அரசியல் அநீதி இழைக்கும் ஆங்கிலேய மந்திரி சபை முறை மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.
முதல்வர் ஜெயலலிதாவை அடுத்த பொதுத்தேர்தலுக்குப் பிறகு பிரதமர் பதவிக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்பு குறித்து பரிசீலிக்க வேண்டும். எந்த அரசியல் சாசனத் தடை இருந்தாலும் அவரையே பிரதமராக ஆக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை, மக்களுக்கு முன்னரே தகவலாக அளிக்கிறேன்' என்று கூறியிருந்தேன்.
எனவே, எனது மனுவை மத்திய சட்டத்துறை செயலாளர், உள்துறை செயலாளர், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க ஆணையிட வேண்டும் என்று கூறியுள்ளார் கிருஷ்ணன்.
இதை விசாரிக்கலாமா, விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்கும் ராஜேஷ் குமார் அகர்வால், நீதிபதி சத்தியநாராயன் இன்று விசாரித்து நடவடிக்கை எடுப்பர்.
-
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா? -
பாஜகவுக்கு 27 சீட்.. என்.டி.ஏ கூட்டணியில் தொகுதி பங்கீட்டை இறுதி செய்து அறிவித்தார் எடப்பாடி!












Click it and Unblock the Notifications