Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஜெயலலிதாவை பிரதமராக்க வேண்டும்.. 77 வயது வக்கீல் உயர்நீதிமன்றத்தில் வழக்கு

Subscribe to Oneindia Tamil

Make Jaya as PM, petition filed in Madras HC
சென்னை: முதல்வர் ஜெயலலிதாவை பிரதமராக்க வேண்டும். அதற்காக சட்ட ரீதியான வழிமுறைகளை ஏற்படுத்த வேண்டும் என்று கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் 77 வயதான ஒரு மூத்த வக்கீல் வழக்குப் போட்டுள்ளார்.

அந்த வக்கீலின் பெயர் பி.ஆர்.கிருஷ்ணன். இவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது...:

நாட்டின் தென்பகுதிக்கு அரசியல் நீதி கிடைக்க வேண்டும் என்பதுதான் எனது நோக்கமாகும். சுதந்திரம் பெற்ற பிறகு 62 ஆண்டுகளாக இந்தியாவின் தென் மாநிலங்களில் இருந்து குறிப்பாக தமிழகத்தில் இருந்து பிரதமர் தேர்வு செய்யப்படவில்லை. தென்பகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்டவர்கள், சந்தர்ப்பவசத்தால் வந்தார்களே தவிர, அரசியல் சாசன வழிமுறைகளின்படி வரவில்லை.

இப்படி தென்பகுதிக்கு அரசியல் அநீதி இழைக்கப்படுவதற்கு, இன்னும் நாம் ஆங்கிலேயர்களின் அமைச்சரவை மாதிரிகளை பின்பற்றுவதே காரணமாகும். இந்தியாவின் எந்தப் பகுதியில் வசிப்பவர்களுக்கும் மொழி, மாநிலம் ஆகிய எந்த பாகுபாடும் இல்லாமல் அதிகாரங்களை பகிர்ந்துகொள்ள வேண்டும் என்பதுதான் அரசியல் நீதியாக அமையும்.

ஆனால் தற்போதுள்ள ஆங்கில அமைச்சரவை மாதிரியின்படி இதற்கு வாய்ப்பில்லை. இதனால் குறிப்பாக தமிழ்நாட்டுக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. இந்திய அரசியல் சாசனம், அனைவருக்கும் அரசியல் நீதி கிடைக்க வேண்டும் என்பதை உறுதி செய்துள்ளது.

எனவே, ஆங்கிலேயர்களின் அமைச்சரவை முறையை பின்பற்றி, இந்தியாவின் தென்பகுதிக்கு அரசியல் அநீதியை ஏற்படுத்துவது, அரசியல் சாசனத்தின் 38-வது பிரிவை மீறுவது போன்றதாகும்.

இந்த தொடர் மீறுதல் நடவடிக்கை நிறுத்தப்பட வேண்டும். இதற்காக அரசியல் சாசன மறு சீராய்வு கமிஷனை அமைத்து, பரிசீலனை செய்து, அரசியல் சாசனத்தில் தகுந்த திருத்தங்களை கொண்டு வந்தால், அநீதி இழைக்கப்படுவது நிறுத்தப்படும். இதை நாடாளுமன்றம் செயல்படுத்த வேண்டும்.

அமைச்சரவை மாதிரியை மாற்றுவதற்கான மறுசீராய்வு கமிஷனை அமைப்பதற்கு நாடாளுமன்ற உறுப்பினர்கள் தைரியத்துடன் செயல்பட வேண்டும். இந்த விஷயத்தை அடுத்த பட்ஜெட் கூட்டத் தொடரில் நாடாளுமன்றம் விவாதித்து, அதற்காக என்னென்ன சட்டதிருத்தங்களை கொண்டு வரவேண்டும் என்பதற்கான முடிவுகளை எடுக்க வேண்டும்.

இதுகுறித்து நாடாளுமன்ற சபாநாயகர், மத்திய சட்டத்துறை செயலாளர், உள்துறை செயலாளர், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் ஆகியோருக்கு கடந்த மார்ச் 7-ந்தேதி மனு கொடுத்தேன்.

அதில், ‘இந்தியாவின் தென்பகுதி மாநிலத்தவருக்கும் அரசியல் சம உரிமை கிடைக்கும் வகையில் அரசியல் சாசனம் கொண்டுவரப்பட வேண்டும். அரசியல் அநீதி இழைக்கும் ஆங்கிலேய மந்திரி சபை முறை மறுபரிசீலனைக்கு உட்படுத்தப்பட வேண்டும்.

முதல்வர் ஜெயலலிதாவை அடுத்த பொதுத்தேர்தலுக்குப் பிறகு பிரதமர் பதவிக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்பு குறித்து பரிசீலிக்க வேண்டும். எந்த அரசியல் சாசனத் தடை இருந்தாலும் அவரையே பிரதமராக ஆக்க வேண்டும். இந்தக் கோரிக்கையை, மக்களுக்கு முன்னரே தகவலாக அளிக்கிறேன்' என்று கூறியிருந்தேன்.

எனவே, எனது மனுவை மத்திய சட்டத்துறை செயலாளர், உள்துறை செயலாளர், நாடாளுமன்ற விவகாரத்துறை அமைச்சகம் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க ஆணையிட வேண்டும் என்று கூறியுள்ளார் கிருஷ்ணன்.

இதை விசாரிக்கலாமா, விசாரணைக்கு உகந்ததா என்பது குறித்து தலைமை நீதிபதி பொறுப்பு வகிக்கும் ராஜேஷ் குமார் அகர்வால், நீதிபதி சத்தியநாராயன் இன்று விசாரித்து நடவடிக்கை எடுப்பர்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+