Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பழனி முருகன் பணத்தைத் திருடி ஜாக்கெட்டுக்குள் ஒளித்து வைத்த பெண் கைது

Subscribe to Oneindia Tamil

பழனி: பழனி முருகன் கோவில் உண்டியல் எண்ணும் பணியின்போது பணத்தைத் திருடி ஜாக்கெட்டுக்குள் மறைத்து வைத்த பெண்ணை போலீஸார் கைது செய்தனர்.

பழனி அருள்மிகு பால தண்டாயுதபாணி திருக்கோவில் உண்டியல் பணத்தை எண்ணும் பணி கார்த்திகை மண்டபத்தில் நடந்தது. அதில் பலவேறு தரப்பினரும் கலந்து கொண்டனர். அதேபோல பொள்ளாச்சி கல்யாண விநாயகர் சேவா சங்கத்தைச் சேர்ந்தவர்களும் கலந்து கொண்டனர்.

கல்யாண விநாயகர் சேவா சங்கத்தில் வடமதுரை, செங்குளத்துப்பட்டியைச் சேர்ந்த 40 வயதுப் பெண் சின்னத்தாய் என்பவரும் இடம் பெற்றிருந்தார். இவர் பணத்தை எண்ணும்போது அதை எடுத்து தனது ஜாக்கெட்டுக்குள் மறைத்து வைத்துள்ளார். இதை இன்னொரு பெண் பார்த்து விட்டார். உடனடியாக கோவில் கண்காணிப்பாளரிடம் அதுகுறித்துக் கூறினார்.

இதையடுத்து பெண் ஊழியர்களை வைத்து சின்னத்தாயிடம் சோதனை நடத்தப்பட்டது. அப்போது அவரது ஜாக்கெட்டிற்குள்ளிருந்து ரூ. 29,400 பணம் பறிமுதல் செய்யப்பட்டது. பின்னர் போலீஸில் புகார் கொடுத்து சின்னத்தாய் கைது செய்யப்பட்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+