மும்பை போலீஸார் சம்பள கணக்கை ஹேக் செய்து பணம் எடுப்பு
Subscribe to Oneindia Tamil
மும்பை: மும்பை போலீசார் பலரின் சம்பள கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு அதில் இருந்து பணம் எடுக்கப்பட்டுள்ளது.
ஆக்சிஸ் வங்கியில் மும்பை போலீசார் பலரின் சம்பள கணக்குகள் உள்ளன. இந்நிலையில் பலரின் சம்பள கணக்குகள் ஹேக் செய்யப்பட்டுள்ளன. அந்த கணக்குகளில் இருந்த பணம் கிரீஸ் நாட்டில் எடுக்கப்பட்டுள்ளது. எத்தனை பேரின் கணக்குகள் ஹேக் செய்யப்பட்டது என்று இன்னும் தெளிவாகத் தெரியவில்லை.
இது குறித்து அறிந்த போலீசார் அதிர்ச்சி அடைந்தனர். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த டிசிபி தலைமையில் குழு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது. ஹேக்கிங் விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை அளிக்குமாறு ஆக்சிஸ் வங்கிக்கு போலீசார் உத்தரவிட்டுள்ளனர்.
போலீசாரின் வங்கி கணக்குகள் ஹேக் செய்யப்பட்டு பணம் எடுக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.












Click it and Unblock the Notifications