Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குற்றாலத்தில் படகு போக்கு வரத்து: சுற்றுலா பயணிகள் உற்சாகம்

Subscribe to Oneindia Tamil

குற்றாலம்: குற்றாலம் படகு குழாமில் படகுகள் போக்குவரத்து தொடங்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.குற்றாலத்திற்கு வரும் சுற்றுலா பயணிகளை மகிழ்விக்கும்வகையில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் ஐந்தருவிக்குசெல்லும் வழியில் உள்ள படகு குழாமில் படகு சவாரி நடந்து வருகிறது.

குற்றாலம் சீசன் தொடர்ந்து களைகட்டி வரும் நிலையில் அருவிகளில் தண்ணீர்அதிகரித்து வருவதால் சுற்றுலாப் பயணிகள் கூட்டமும் நாளுக்கு நாள்அதிகரித்து வருகிறது.வெண்ணமடை குளத்தில் தண்ணீர் வரத்து தற்போது அதிகரித்து வருகிறது. இதனை தொடர்ந்து படகு சவாரிக்காக கடந்த ஒரு வாரகாலமாக படகுகளை புதுப்பித்து பெயிண்ட் அடிக்கும் பணியும் நடந்துவந்தது. இப்பணிகள் நேற்றுடன் முடிந்த நிலையில் குற்றால சீசனில் படகுசவாரிக்காக 18 படகுகள் பயன்படுத்தும் வகையில் அதற்கான பணிகள்துரிதப்படுத்தப்பட்டு விடுமுறை தினமான இன்றுமுதல் படகு குழாமில் படகுசவாரி தொடங்கப் பட உள்ளது.

தமிழக சுற்றுலாத் துறை அமைச்சர்செந்தூர் பாண்டியன்,சட்டமன்ற உறுப்பினர் சரத்குமார் ,மாவட்டஆட்சிதலைவர் சமயமூர்த்தி உள்ளிட்டோர் கலந்துக் கொண்டு படகு போக்குவரத்தை தொடக்கி வைக்கின்றனர். படகுப் போக்குவரத்துக்கான கட்டணங்களையும் சுற்றுலா வளர்ச்சி கழகம் நிர்ணயம் செய்துள்ளது.

அடிப்படை வசதிகள் தேவை

அடிப்படை வசதிகள் தேவை

இதனிடையே குற்றாலத்தில் பெண்கள் குளித்துவிட்டு உடை மாற்றிட போதிய இட வசதி,பாது கப்பு வசதி ,வாகன போக்குவரத்தை கட்டுப்படுத்திட மாற்று ஏற்பாடு,அருவிக் கரையில் குடிநீர் வசதி ,மருத்துவ வசதி என எந்த அடிப்படை வசதியும் இங்கு செய்யப் படவில்லை. நீச்சல் குளத்தில் மேற்க் கூரை இன்னும் சரி செய்யப் படவில்லை இப்படி பல குறைகள் குற்றாலத்தில் கூட்டம் நிரம்பி வழிகிறது.

மாற்று நடவடிக்கை

மாற்று நடவடிக்கை

இந்த நிலையில் மெயின் அருவி பகுதியினைஎம்.எல்.ஏ., சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா ஆகியோர் பார்வையிட்டனர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய
சரத்குமார் கூறியதாவது:

மெயின் அருவி பகுதியில் சுற்றுலாப் பயணிகளுக்கு இடையூறு இல்லாத வகையில் துணிகள் துவைப்பதற்கு தடை விதிக்கப்படுமென கூறப்பட்டுள்ளது. அருவியின் பசுமையினை பாதுகாக்கும் வகையிலும், சுற்றுலா பயணிகளுக்கு இடையூறு ஏற்படாத வகையிலும் குற்றாலம் மெயின் அருவியில் துணிகள் துவைப்பதற்கு மாற்று ஏற்பாடு செய்வது தொடர்பாக தமிழக சுற்றுலாத்துறை அமைச்சர் மற்றும் மாவட்ட கலெக்டருடன் ஆலோசிக்கப்படும். இது தொடர்பான நடவடிக்கை எடுக்க உரிய பரிசீலனை மேற்கொள்ளப்படும் என தெரிவித்தார்.

சரத்குமார் ஆலோசனை

சரத்குமார் ஆலோசனை

அருவிக்கரை பகுதிக்கு வந்த எம்.எல்.ஏ., வை பார்க்க சுற்றுலா பயணிகள் முண்டியடித்துக் கொண்டு வந்தனர். அருவிக்கரை பகுதியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள் குறித்து எம்.எல்.ஏ., சரத்குமார் பஞ்.,தலைவர் லதா மற்றும் அதிகாரிகளுடன் அப்பகுதியில் ஆலோசனை மேற்கொண்டார். குற்றாலம் மெயின் அருவி பகுதியில் அமைக்கப்பட்டிருந்த ஈடாய்லெட் செயல்படாமல் இருப்பது குறித்து டவுன் பஞ்சாயத்து அதிகாரிகளிடம் இது தொடர்பான நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொண்டார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+