மக்கேனைத் தொடர்ந்து சி.பி.ஜோஷியும் ராஜினாமா - நாளை அமைச்சரவை மாற்றம்

இதைத் தொடர்ந்து நாளை அமைச்சரவை மாற்றம் செய்யப்படவுள்ளது.
மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வறுமை ஒழிப்புத் துறை அமைச்சர் அஜய் மக்கேன் தனது பதவியை நேற்று ராஜினாமா செய்தார். அவர் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் மத்திய அமைச்சர் ஆனார்.
அவர் கட்சி பணியாற்ற தனது பதவியை ராஜினாமா செய்துள்ளதாகக் கூறப்படுகிறது. அவருக்கு டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவி அல்லது கட்சியின் பொதுச் செயலாளர் பதவி வழங்கப்படும் என்று கூறப்படுகிறது.
அவருக்கு டெல்லி காங்கிரஸ் தலைவர் பதவி வழங்கப்பட்டால் அவர் டெல்லியின் அடுத்த முதல்வர் ஆகும் வாய்ப்புகள் உள்ளது என்று கூறப்படுகிறது. ஷீலா தீட்சித் கடந்த 15 ஆண்டுகளாக டெல்லி முதல்வராக இருந்து வருகிறார். ஒரு பெண் தொடர்ந்து 3 முறை ஒரு மாநிலத்தின் முதல்வராகியுள்ளது இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது.
மக்கேனைத் தொடர்ந்து இன்று சி.பி.ஜோஷியும் தனது பதவியை ராஜினாமா செய்தார். அவரது ராஜினாமாவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி ஏற்றுக் கொண்டார்.
இதையடுத்து நாளை அமைச்சரவை மாற்றம் இடம் பெறுகிறது. நாளைய அமைச்சரவை மாற்றத்தில், நான்கு கேபினட் அமைச்சர்கள் மற்றும் நான்கு இணை அமைச்சர்கள் பதவியேற்கவுள்ளனர்.
மேலும் காங்கிரஸ் கட்சியிலும் நிர்வாக ரீதியாக பெரும் மாற்றம் செய்யப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
லோக்சபா தேர்தலுக்கு முன்பு நிகழக் கூடிய கடைசி அமைச்சரவை மாற்றமாக நாளைய அமைச்சரவை மாற்றம் வர்ணிக்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications