தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளராக மாஜி அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் நியமனம்

தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளராக அமைச்சர் சி.த. செல்லப்பாண்டியன் இருந்து வந்தார். இந்நிலையில் அவர் அப்பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் எஸ்.பி. சண்முகநாதன் தூத்துக்குடி மாவட்ட அதிமுக செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சண்முகநாதன் அவர் வகித்து வந்த தூத்துக்குடி மாவட்ட எம்.ஜி.ஆர். மன்ற செயலாளர் பொறுப்பில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார். இது குறித்த அறிவிப்பை அதிமுக பொதுச் செயலாளரும், முதல்வருமான ஜெயலலிதா வெளியிட்டுள்ளார்.
2011 ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம் தொகுதியில் இருந்து எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்டவர் எஸ்.பி. சண்முகநாதன். அவருக்கு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பதவி வழங்கப்பட்டது. ஆனால் பதவி வழங்கப்பட்ட ஆறே மாதத்தில் பறிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் இன்று சண்முகநாதனுக்கு மீண்டும் அமைச்சர் பதவி வழங்கியுள்ளார் ஜெயலலிதா. அவருக்கு சுற்றுலாத் துறை வழங்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications