சேலத்தில் தண்ணீர் என்று நினைத்து பாத்ரூம் கழுவும் ஆசிட்டை குடித்தவர் பலி
Subscribe to Oneindia Tamil
சேலம்: சேலத்தில் தண்ணீர் என்று நினைத்து ஆசிட்டை குடித்தவர் பலியானார்.
சேலம் மாவட்டம் அன்னதானப்பட்டி கண்ணகி தெருவைச் சேர்ந்தவர் நெடுஞ்செழியன்(42). அவர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை தண்ணீர் என்று நினைத்து வீட்டில் இருந்த ஆசிட்டை எடுத்து குடித்துவிட்டார். கழிவறையை சுத்தம் செய்ய பயன்படுத்தப்படும் ஆசிட் அது.
கழிவறையை சுத்தம் செய்யப் பயன்படுத்தும் ஆசிட் ஒன்றும் செய்யாது என்று நினைத்து கொண்டு அவர் மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறாமல் இருந்துவிட்டார். அன்று இரவு அவருக்கு வயிற்று வலி ஏற்பட்டு துடித்துள்ளார். இதையடுத்து அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி உயிர் இழந்தார்.
இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.












Click it and Unblock the Notifications