குடும்பத் தகராறில் கணவனின் கழுத்தை கேபிள் வயரால் இறுக்கி கொலை செய்த மனைவி கைது

Subscribe to Oneindia Tamil

நெல்லை: நெல்லை மாவட்டம் புளியங்குடியில் கணவனின் கழுத்தை கேபிள் வயரால் இறுக்கி கொலை செய்த மனைவியை காவல்துறையினர் கைது செய்தனர்.

புளியங்குடி ஆர்.எஸ்.ஏ.பி., தெருவைச் சேர்ந்தவர் கணேசன்(38)கட்டிட தொழிலாளி. இவருக்கும் புளியங்குடியை சேர்ந்த குருசாமி மகள் ஜெயகுருவம்மாள் (35) என்பவருக்கும் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது.இவர்களுக்கு 2 மகன்களும்,ஒரு மகளும் உள்ளனர்.

கணேசனுக்கும், இந்நிலையில் கடந்த 5 ஆண்டுகளுக்கு முன்னர் மாரியம்மாள் (30) என்பவரை கணேசன் இரண்டாவது திருமணம் செய்துள்ளார். மாரியம்மாளுக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.

கணேசன் அடிக்கடி குடித்துவிட்டு முதல் மனைவியிடம் தகராறு செய்து வந்துள்ளார். மேலும் 2வது மனைவியுடனேயே அதிக நாட்கள் இருந்ததாக தெரிகிறது. இதனால் முதல் மனைவி வீட்டிற்கு சரியாக வராமலும், குடும்பத்தை கவனிக்காமலும் இருந்ததாக கூறப்படுகிறது. இது ஜெயாவுக்கு கடுமையான கோபத்தை ஏற்படுத்தியது.

இந்நிலையில் நேற்று மாலை ஜெயா வீட்டிற்கு வந்த கணேசன் அவரிடம் தகராறு செய்தார். அப்போது இருவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. இதனால் கோபமடைந்த ஜெயா அருகில் கிடந்த கேபிள் டிவி வயரை எடுத்து கணேசனின் கழுத்தை நெரித்தார். இதில் உடனடியாக கணேசன் உயிரிழந்தார்.

இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த போலீஸார் கணேசன் உடலை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டனர். கணவனை கொலை செய்த ஜெயாவை கைது செய்தனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+