பத்திரங்கள் வாங்குவதை நிறுத்தியது அமெரிக்கா... தள்ளாட்டத்தில் உலக சந்தை!

ஒவ்வொரு மாதமும் 85 பில்லியன் மதிப்புள்ள பங்குப் பத்திரங்களை அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வாங்கி வந்தது. நீண்ட கால வட்டி விகிதம் நிலையாக இருக்கவும் பணப் பரிவர்த்தனை மற்றும் செலவுகளை ஊக்குவிக்கவும் இதனைச் செய்து வந்தது அமெரிக்க நிதித்துறை.
ஆனால் நிதித்துறை தலைவர் பென் பெர்னான்கே இனி பத்திரங்கள் வாங்குவதை அமெரிக்க நிதித்துறை நிறுத்திக் கொள்ளும் என்று புதன்கிழமை அறிவித்துவிட்டார்.
இந்த அறிவிப்பு காரணமாக சர்வதேச அளவில் பங்குச் சந்தைகள் ஆட்டம் கண்டுள்ளன.
ஜப்பானின் நிக்கி 1.1 சதவீதம் வீழ்ச்சியடைந்தது. இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ், தாய்லாந்து மற்றும் ஆஸ்திரேலியாவின் சந்தைகள் 2 சதவீதம் வரை வீழ்ச்சியடைந்தன.
ஹாங்காங்கின் ஹாங் செங் மார்க்கெட் 2.4 சதவீதம் சரிந்தது. வால் ஸ்ட்ரீட்டிலும் வீழ்ச்சி நிலையே காணப்பட்டது. டவ் ஜோன்ஸ் 1.4 சதவீதமும், நாஸ்டாக் 1.1 சதவீதமும் சரிவுக்குள்ளாகின.
ஈரோவின் பணமதிப்பு 1.3274 லிருந்து 1.3268 ஆக வீழ்ந்தது. ஆனால் டாலர் மதிப்பு 96.54 லிலிருந்து 66.68 ஆக உயர்ந்துள்ளது.












Click it and Unblock the Notifications