சென்னையில் மறுபடியும் வெயில் மண்டையைப் பொளக்குதப்பா....!
சென்னை: சென்னை உள்பட தமிழகத்தின் பல நகரங்களில் வெயில் மறுபடியும் செஞ்சுரி போட ஆரம்பித்துள்ளது. சென்னையில்தான் அதிகபட்ச வெயில்அடித்துள்ளது.
கோடை காலம் இன்னும் முடியவில்லை. இருப்பினும் தென் மேற்குப் பருவ மழையின் புண்ணியத்தால் அவ்வப்போது மழை பெய்து வருகிறது.
இந்த நிலையில் தற்போது மறுபடியும் வெயில் வெளுத்து வாங்க ஆரம்பித்துள்ளது. குறிப்பாக தலைநகர் சென்னையில் நேற்று அதிகபட்சமாக 103 டிகிரி வெயில் அடித்தது.

14 நகரங்களில் சதம்
தமிழகத்தின் 14 நகரங்களில் வெயில் 100 டிகிரி அல்லது அதற்கு மேல் பதிவாகியுள்ளது.

சென்னையில் 103
அதேசமயம், தலைநகர் சென்னையில் நேற்று அதிகபட்சமாக 103 டிகிரி வெயில் அடி்ததது.

மலைப்பக்கம் நல்ல மழை
அதேசமயம், மேற்குத் தொடர்ச்சி மலையையொட்டிய பகுதிகளில் நல்ல மழை காணப்படுகிறது. இதனால் அப்பகுதிகள் ஜில்லென்று காணப்படுகின்றன.

இன்று மழை பெய்யலாம்
இதற்கிடையே, இன்று தமிழகம் மற்றும் புதுவையில் சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications