சீனாவில் 11 சிறுமிகளை கற்பழித்த கம்யூனிஸ்ட் கட்சி நிர்வாகி தூக்கிலிடப்பட்டார்
Subscribe to Oneindia Tamil

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் கம்யூனிஸ்ட் கட்சியின் யாங்செங் நகர குழுவின் துணை தலைவராக இருந்தவர் லி ஜிங்காங். அவர் கடந்த 2011ம் ஆண்டில் இருந்து 11 சிறுமிகளை கற்பழித்துள்ளார். இதையடுத்து அவர் 2012ம் ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கை விசாரித்த ஷாங்க்யூ நகர நீதிமன்றம் லீக்கு மரண தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தீர்ப்பை எதிர்த்து அவர் ஹெனான் மாகாண நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். ஆனால் அவரது மனு தள்ளுப்படி செய்யப்பட்டது.
இதையடுத்து கடந்த செவ்வாய்கிழமை அவர் தூக்கிலிடப்பட்டார். பாலியல் கொடுமைகளில் இருந்து குழந்தைகளை காக்க சீன அரசு உறுதி பூண்டிருக்கும் வேளையில் லீ தூக்கிலிடப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications