உத்தர்காண்ட் வெள்ளம்..ஜூன் 23 வரை 96,500 பேர் மீட்பு: சுப்ரீம் கோர்ட்டில் மத்திய அரசு
டெல்லி: உத்தர்காண்ட் வெள்ளத்தில் சிக்கிய 96,500 பேர் ஜூன் 23-ந் தேதிவரை மீட்கப்பட்டிருப்பதாக உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
உத்தர்காண்ட் வெள்ள மீட்பு த்ஒடர்பாக வழக்கறிஞர் அஜய் பன்சால் தாக்கல் செய்த பொதுநலன் மனுவை நீதிபதிகள் ஏ.கே. பட்நாயக், ரஞ்சன் கோகய் ஆகியோர் அடங்கிய பெஞ்ச் விசாரித்தது. அந்த மனுவில் சில யோசனைகளும் தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்த யோசனைகளை பரிசீலிக்குமாறு மத்திய மற்றும் உத்தர்காண்ட் அரசுகளை உச்சநீதிமன்றம் கேட்டுக் கொண்டது.
இதனிடையே மத்திய அரசு மற்றும் உத்தர்காண்ட் மாநில அரசு மேற்கொண்ட வெள்ள மீட்பு தொடர்பாக அறிக்கை உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டது. அதில் ஜூன் 23-ந் தேதி வரை 96,500 பேர் மீட்கப்பட்டுள்ளனர். மொத்தம் 1,189 முறை மீட்பு ஹெலிகாப்டர்கள் வானில் பறந்து பொதுமக்களை காப்பாற்றியுள்ளன. விமானப் படைக்குச் சொந்தமான விமானம் 419 முறை விமானத்தில் பறந்து மீட்புப் பணிகளை செய்துள்ளது

மீட்கப்பட்ட அனைவரும் சொந்த ஊர்களுக்குச் செல்ல இலவச போக்குவரத்து வசதியும் செய்யப்பட்டுள்ளது. மீட்கப்பட்டோரை ஹரித்வார் மற்றும் டேராடூன் அழைத்து வர மொத்தம் 4 ஆயிரம் வாகனங்கள் பயன்படுத்தப்படுகின்றன. 80% தொலைத் தொடர்பு வசதிகள் சீரமைக்கப்பட்டிருக்கின்ற்னா. மீட்புப் பணிகளுக்காக 77 செயற்கைக் கோள் தொலைபேசிகள் கொடுக்கப்பட்டிருக்கின்றன என்று மத்திய அரசின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாநில அரசு தாக்கல் செய்த நடவடிக்கை அறிக்கையில், அடுத்த 72 மணி நேரத்தில் மீட்புப் பணிகள் முழுவதும் முடிந்துவிடும். நேற்று வரை பலி எண்ணிக்கை 560 என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.












Click it and Unblock the Notifications