உத்தகண்ட் வெள்ள நிவாரணத்திற்கு ரூ.10 லட்சம் அளித்த திகார் சிறை கைதிகள்
டெல்லி: டெல்லி திகார் சிறையில் உள்ள சில கைதிகள் மற்றும் ஊழியர்கள் சேர்ந்து உத்தரகண்ட் நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சம் அளித்துள்ளதாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
உத்தரகண்ட் மாநிலத்தில் பெய்த கனமழையால் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. இது தவிர மலைப் பகுதிகளில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. இதில் சிக்கி ஆயிரக் கணக்கானோர் பலியாகியுள்ளனர். இந்நிலையில் நேற்றில் இருந்து மீண்டும் கன மழை பெய்து வருவதால் மீட்பு பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.

உத்தரகண்ட் நிவாரண நிதிக்கு டெல்லியில் உள்ள திகார் சிறை கைதிகளில் சிலர் மற்றும் ஊழியர்கள் சேர்ந்து ரூ.10 லட்சம் அளித்துள்ளனர். அதற்கான காசோலையை சிறைத்துறை டைரக்டர் ஜெனரல் விம்லா மெஹ்ரா டெல்லி முதல்வர் ஷீல் தீட்சித்திடம் நேற்று அளித்தார்.
இது குறித்து திகார் சிறை செய்தித் தொடர்பாளர் சுனில் குப்தா கூறுகையில்,
கைதிகள் தங்கள் தினசரி வருமானத்தில் இருந்து நன்கொடை அளித்துள்ளனர். அதில் அதிகபட்சமாக சிறை எண் 3ல் உள்ளவர்கள் ரூ.3.5 லட்சம் அளித்துள்ளனர் என்றார்.












Click it and Unblock the Notifications