முயல் வேட்டைக்கு அபராதம் கட்டிய கணவன் : மனமுடைந்த மனைவி தற்கொலை
மத்தூர்: முயல் வேட்டைக்குச் சென்ற கணவன் வனத்துறையினரிடம் சிக்கியதால், மனமுடைந்த மனைவி தற்கொலை செய்து கொண்டார்.
ஊத்தங்கரை அருகே உள்ள ரெட்டிப்பட்டியைச் சேர்ந்த தங்கமணி (40)யின் மனைவி மணி (35). தங்கமணிக்கு முயல் வேட்டை பிடித்தமான பொழுதுபோக்காம். சம்பவத்தன்றும் தங்கமணி சிங்காரப்பேட்டை காப்புகாட்டில் முயல் வேட்டைக்கு சென்றுள்ளார்.
ஆனால், அன்று எதிர்பாராத விதமான வனத்துறையினரிடம் சிக்கினார் தங்கமணி. விசாரணையில் அவர் முயல் வேட்டைக்காக வந்ததை ஒப்புக் கொண்டார். இதனால், வனத்துறையினர் தங்கமணிக்கு ரூ. 4500 அபராதம் விதித்துள்ளனர்.
அபராதத்தை கட்டிய தங்கமணி வீட்டிற்கு சென்று மனைவியிடம் தான் வனத்துறையினரிடம் சிக்கிய கதையைக் கூறியுள்ளார். அதனைக் கேட்ட பின், அது சம்பந்தமாக கணவன்-மனைவி இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.
தகறாரினால் மனமுடைந்த மணி பூச்சி மருந்தைக் குடித்து தற்கொலை செய்து கொண்டார். விவரம் அறிந்த போலீசார், வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.












Click it and Unblock the Notifications