காசா பகுதியில் தொடரும் பதற்றம்.. இஸ்ரேல் மீண்டும் குண்டு வீச்சு
Subscribe to Oneindia Tamil
ஜெருசலேம்: பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இஸ்ரேல் போர் விமானங்கள் மீண்டும் குண்டுகளை வீசி தாக்குதல் நடத்தியிருப்பதால் அங்கு பதற்றம் உருவாகியுள்ளது.
பாலஸ்தீனத்தின் காசா பகுதியில் இருந்து முதலில் இஸ்ரேல் நோக்கி ராக்கெட்டுகள் ஏவப்பட்டதாக இஸ்ரேல் கூறுகிறது. இதில் 2 ராக்கெட்டுகளை சுட்டு வீழ்த்திவிட்டதாக இஸ்ரேல் தெரிவித்துள்ளது.
இதைத் தொடர்ந்து இஸ்ரேல் போர் விமானங்கள் பாலஸ்தீனத்திலுள்ள காசா பகுதி மீது குண்டுகளை வீசித் தாக்குதல் நடத்தியிருக்கின்றன. காசா பகுதியில் செயல்படும் ஹமாஸ் இயக்கத்தினரின் ஆயுத கிடங்கு, பயிற்சி மையத்தை குறிவைத்து தாக்கியதாக இஸ்ரேல் ராணுவ அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சிறிது கால இடைவெளிக்குப் பின் காசா பகுதியில் தொடரும் இஸ்ரேலிய தாக்குதல்களால் மோதல் வெடித்திருக்கிறது.












Click it and Unblock the Notifications