மீட்புப் பணியில் உயிரிழந்த வீரர்கள்: பகுகுனா 10 லட்சம், மோடி 5 லட்சம் நிவாரண நிதி அறிவிப்பு

Subscribe to Oneindia Tamil

Uttarakhand chopper crash: Death toll rises to 20, Narendra Modi offers R 5 lakh to each air warrior
டேராடூன்: உத்தரகாண்டில் மீட்புப் பணியில் ஈடுபட்ட விமானப் படை ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதில் பலியான வீரர்களுக்கு உத்தரகாண்ட் அரசு சார்பிலும், குஜராத் அரசு சார்பிலும் நஷ்ட ஈடு அறிவிக்கப்பட்டுள்ளது.

உத்தரகாண்ட் பேரழிவில் சிக்கி உயிருக்கு போராடிய இருபது பேரை மீட்டுச் சென்ற விமானப்ப்டை ஹெலிகாப்டர் ஒன்று மோசமான வானிலை காரணமாக நேற்று விபத்தில் சிக்கியது. இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் பயணம் செய்த அனைவருமே உயிரிழந்திருக்கலாம் என அஞ்சப்படுகிறது. இதுவரை 12 உடல்கள் மீட்கப் பட்டுள்ளன.

இச்சோகச்சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துள்ள உத்தரகாண்ட் முதலமைச்சர் விஜய் பகுகுனா மீட்புப் பணியில் உயிர்த் தியாகம் செய்த ராணுவ வீரர்களின் குடும்பத்திற்கு தலா ரூ.10 லட்சம் நஷ்ட ஈடு வழங்கப்படும் என அறிவித்துள்ளார்.

மேலும், குஜராத் முதலமைச்சர் மோடி, குஜராத் அரசு சார்பில் வீரர்களின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்ச ரூபாயை நஷ்ட ஈடாக வழங்க உத்தரவிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், 'உத்தரகாண்டில் சிக்கித்தவிப்போரை மீட்கும் பணியில் ஈடுபட்டு தங்கள் இன்னுயிரை தந்துள்ள வீரர்களுக்கு தலைவணங்கும் எனது அரசு, அவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்ச ரூபாய் உதவி வழங்கும். மேலும் உயிரிழந்த அனைவரின் ஆன்மா சாந்தியடைய வேண்டுகிறேன்' எனத் தெரிவித்துள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+