விறுவிறு ராஜ்யசபா தேர்தல்.. 231 வாக்குகள் பதிவாகின! பாமக எம்.எல்.ஏக்கள் புறக்கணிப்பு!

Subscribe to Oneindia Tamil

Stage set for battle of ballots in Rajya Sabha poll today
சென்னை: தமிழகத்தில் இன்று நடைபெற்ற ராஜ்யசபா தேர்தலில் மாலை 4 மணியுடன் முடிவடைந்த வாக்குப் பதிவு முடிவில் மொத்தம் 231 வாக்குகள் பதிவாகி இருந்தன. பாமகவின் 3 எம்.எல்.ஏக்கள் ராஜ்யசபா தேர்தலை புறக்கணித்தனர்.

தமிழகத்தைச் சேர்ந்த 6 ராஜ்யசபா எம்.பி.க்களின் பதவிக்காலம் முடிவடையும் நிலையில் இன்று 6 எம்.பி. இடங்களுக்காகத்
தேர்தல் நடைபெற்றது. தமிழக சட்டசபையில் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட எம்.எல்.ஏக்கள் 234 பேர். நியமன எம்.எல்.ஏ. ஒருவர். இவருக்கு வாக்குரிமை இல்லை.

தமிழகத்தில் 6 எம்.பி. இடங்களுக்கு 7 பேர் போட்டியிட்டதால் 17 ஆண்டுகளுக்குப் பிறகு வாக்குப் பதிவு நடைபெற்றது.

விறுவிறு வாக்குப் பதிவு

சென்னை தலைமை செயலக கட்டிடத்தின் தரைத்தளத்தில் அமைந்துள்ள சட்டசபை பேரவை குழுக்கள் கூடும் அறையில் இன்று காலை 9 மணிக்கு வாக்குப் பதிவு தொடங்குவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.ஆனால் முற்பகல் 11.30 மணிக்குத்தான் வாக்குகள் பதிவாகத் தொடங்கின. பின்னர் விறுவிறுவென தொடங்கிய இந்த வாக்குப் பதிவு இரண்டேகால் மணி நேரத்தில் முடிவடைந்தது. பிற்பகல் 1.45 மணியளவில் பதிவாகும் என எதிர்பார்க்கப்பட்ட 231 வாக்குகளும் பதிவாகின.

வாக்குச் சீட்டு எப்படி இருந்தது?

வாக்குச்சீட்டில் அகர வரிசைப்படி அதாவது, கே.ஆர்.அர்ஜூணன் (அ.தி.மு.க), ஏ.ஆர்.இளங்கோவன் (தே.மு.தி.க.), இரா.லட்சுமணன் (அ.தி.மு.க.), கனிமொழி (தி.மு.க.), டாக்டர் வா.மைத்ரேயன் (அ.தி.மு.க.), த.ரத்தினவேல் (அ.தி.மு.க.), டி.ராஜா (இந்திய கம்யூனிஸ்ட்) ஆகியோரது பெயர்கள் இடம்பெற்றிருந்தன.

வாக்களித்தது எப்படி?

வெள்ளை நிறத்தில் உள்ள வாக்குச்சீட்டில் வேட்பாளர்களின் பெயர்கள் கருப்பு நிறத்தில் அச்சிடப்பட்டு இருந்தன. வேட்பாளரின் பெயருக்கு எதிரே உள்ள பகுதியில் எண்ணால் வாக்களிக்கப்பட்டன. அதாவது யாருக்கு வாக்ககுப் போட எம்.எல்.ஏ.க்கள் விரும்புகிறார்களோ அவர்களை முதல் முன்னுரிமை, 2-வது முன்னுரிமை என்ற அடிப்படையில் வாக்களித்தனர்.

மாலை 4 மணிக்கு வாக்குப் பதிவு முடிவு

பிற்பகலிலேயே அனைத்து வாக்குகளும் பதிவாகிவிட்டாலும் அதிகாரப்பூர்வமாக மாலை 4 மணி வரை வாக்கு பதிவு மையம் திறந்து வைக்கப்பட்டிருந்தது. வாக்களிக்க வேண்டிய பாமகவின் 3 எம்.எல்.ஏக்கள் அதுவரை வாக்களிக்காமல் தேர்தலை புறக்கணித்தனர். இதைத் தொடர்ந்து வாக்குப் பெட்டிகள் அனைத்தும் சீல் வைக்கப்பட்டு அலுவல் ஆய்வுக் குழு அறையில் வைக்கப்பட்டன.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+