எங்க 'பாஸ்' எப்பவுமே 'லேட்'டுதான்... மைக்கேல் ராயப்பன் நக்கல்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜயகாந்த் எந்த முடிவையும் உடனடியாக, விரைவாக எடுக்க மாட்டார் என்பதற்கு எங்களை கட்சியிலிருந்து சஸ்பெண்ட் செய்துள்ளதே மிகச் சரியான உதாரணமாகும் என்று அதிருப்தி தேமுதிக எம்.எல்.ஏ மைக்கேல் ராயப்பன் கூறியுள்ளார்.

தமிழக சட்டசபையில் தேமுதிகவின் பலம் 29 ஆக இருந்தது. இதில் மாபா பாண்டியராஜன், மைக்கேல் ராயப்பன், தமிழழகன், சுந்தரராஜன், அருண் பாண்டியன், சுரேஷ்குமார், சாந்தி ஆகிய 7 பேரும் பிரிந்து சென்று செயல்பட்டு வருகிறார்கள்.

ராஜ்யசபா தேர்தலில் இந்த 7 பேரும் அதிமுகவுக்கு ஆதரவாக வாக்களித்தனர். இதையடுத்து சஸ்பெண்ட் நடவடிக்கையை எடுத்தார் விஜயகாந்த்.

அதாச்சு பல மாசம்

அதாச்சு பல மாசம்

இதுகுறித்து மைக்கேல் ராயப்பன் கூறுகையில், அதிருப்தியாக நாங்கள் செயல்பட தொடங்கி பல மாதங்கள் ஆகிறது. இப்போதுதான் நோட்டீஸ் அனுப்புகிறார்கள்.

எதையுமே வேகமாக எடுக்க மாட்டார்

எதையுமே வேகமாக எடுக்க மாட்டார்

எந்த முடிவையும் விஜயகாந்த் வேகமாக எடுக்க மாட்டார் என்பதற்கு இதுவே உதாரணம்.

ஏன் தயக்கம்

ஏன் தயக்கம்

உதிர்ந்த ரோமம் என்றெல்லாம் எங்களை வர்ணித்தார்கள். கட்சியில் இருந்து எங்களை நீக்குவதற்கு தயக்கம் ஏன்?

ஓரேயடியா நீக்கிருங்களேன்

ஓரேயடியா நீக்கிருங்களேன்

தற்காலிக நீக்கமே மகிழ்ச்சி அளிக்கிறது. நிரந்தரமாக நீக்கினால் இன்னும் மகிழ்ச்சி அடைவேன்.

திணறுகிறாரே...

திணறுகிறாரே...

முதல்வர் ஜெயலலிதா ஆரம்பித்த நாடகத்தை முடித்து வைப்பேன் என்றார் விஜயகாந்த். இதுவரை முடிக்க முடியாமல் திணறுகிறார்.

எதிர்கட்சி தலைவர் பதவி பறிபோய்விடும் என்பதற்காகத்தான் எங்களை கட்சியில் இருந்து நீக்காமல் இருக்கிறார். எதையும் சுய நலத்தோடுதான் சிந்திப்பார் என்றார் ராயப்பன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+