ஆந்திராவில் தீயா வேலை பார்த்த திக்விஜய்சிங்.. ட்விட்டரில் ரிப்போர்ட் செய்தார்!
ஹைதராபாத்: ஆந்திர மாநில காங்கிரஸ் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டிருக்கும் அக்கட்சியின் பொதுச்செயலாளர் திக்விஜய்சிங் இன்று ஹைதராபாத்தில் முகாமிட்டு கட்சி நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.
ஹைதரபாத் வந்த திக்விஜய்சிங், ஆந்திர காங்கிரஸ் கமிட்டி தலைமையகமான காந்தி பவனுக்கு சென்றார். அம்மாநில முதல்வர் கிரண்குமார் ரெட்டி, மாநில காங்கிரஸ் தலைவர் போட்சா சத்நாரயணா உள்ளிட்டோர் அவ்ரை வரவேற்றனர். பின்னர் மாவட்ட நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.

குறிப்பாக தெலுங்கானா விவகாரம் குறித்து அப்பகுதி காங்கிரசாருடன் திக்விஜய்சிங் ஆலோசனை நடத்தினார். வழக்கம் போல தெலுங்கானா விவகாரத்தில் விரைவில் காங்கிரஸ் மேலிடம் முடிவு எடுக்கும் என்று உறுதிமொழி கொடுத்திருக்கிறார் திக்விஜய்சிங்,
இந்தக் கையோடு ட்விட்டரில் ஆந்திர மாநில அரசு செயல்பாடுகள் பற்றி காலை முதல் பதிவுகளைப் போட்டு ஆந்திராவில் தீயா வேலை செய்கிறேன் என்று காட்டியிருக்கிறார் திக்விஜய்சிங்.












Click it and Unblock the Notifications