உத்தரகாண்ட் அரசை டிஸ்மிஸ் செய்க: டுவிட்டரில் கொதித்த சுஷ்மா
டெல்லி: உத்தரகாண்டில் மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகளை சரிவர கையாள தவறிய அம்மாநில அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என சுஷ்மா ஸ்வராஜ் டுவிட்டர் வலைத்தளத்தில் கூறியுள்ளார்.
உத்தரகாண்ட் வெள்ளத்தில் பாதித்த மக்களுக்கு நிவாரணப்பணிகள் செய்வது தொடர்வது, பா.ஜனதாவுக்கும், காங்கிரசுக்கும் இடையே டுவிட்டர் தளம் மூலம் மோதல் வெடித்துள்ளது.
மத்திய அமைச்சர் மணீஷ் திவாரிதான் முதலில் பிரச்னையை கிளப்பினார். அவர் தனது டுவிட்டர் தளத்தில், "பா.ஜனதா தலைவர்கள் சுஷ்மா சுவராஜுக்கும், அருண்ஜெட்லி ஆகியோர் உத்தரகாண்ட் மாநிலம் சென்று எட்டிகூட பார்க்கவில்லை, அவர்களுக்கு சி.பி.ஐ.க்கு சுயாட்சி கொடுத்தது பற்றி பேசவே நேரம் உள்ளது. என்று குறிப்பிட்டிருந்தார்.
இதற்கு தனது டுவிட்டர் தளத்தில் பதிலடி கொடுத்த சுஷ்மா ஸ்வராஜ், வி.ஐ.பி.க்கள் உத்தரகாண்டுக்கு இப்போது சென்றால் மீட்புப் பணிகள் பாதிக்கும் என்று உள்துறை அமைச்சர் ஷிண்டே கூறி இருந்தார். எனவேதான் நாங்கள் உத்தரகாண்டுக்கு செல்லவில்லை. மீட்புப் பணிகளை செய்ய காங்கிரஸ் கட்சியை எழுப்பிவிட்டதே பா.ஜனதாதான்" என்று குறிப்பிட்டிருந்தார்.
உத்தரகாண்ட் மீட்பு நடவடிக்கைகளை பா.ஜ.க. அரசியல் ஆக்குகிறது என்று மனீஷ் திவாரி கூறியிருந்தார்.
இதைக் கண்டு கொதித்த, சுஷ்மா ஸ்வராஜ், காங்கிரசை கடுமையாக தாக்கி தனது டுவிட்டர் பக்கத்தில் எழுதியுள்ளார். நாடு இன்று ஒரு மோசமான சூழ்நிலையில் உள்ளது. அதற்கு காரணம் காங்கிரஸ் கட்சிதான். மத்திய அரசு மீது நம்பிக்கை இல்லை. அதனால்தான் உத்தரகாண்ட் சம்பவத்துக்கு உதவிகள் செய்ய எந்த ஒரு நாடும் முன்வரவில்லை".
"பேரழிவு ஏற்பட்டுள்ள உத்தரகாண்ட்டில் மக்கள் பசி பட்டினியுடன் கிடக்கிறார்கள். பலியானவர்கள் உடலில் உள்ள நகைகளை வெட்டி எடுத்து செல்கிறார்கள். உத்தரகாண்ட் மாநில அரசு இதை தடுக்க வேண்டாமா? அம்மாநில அரசு என்ன செய்துள்ளது? ஒன்றுமில்லை.
உத்தரகாண்ட் மாநில அரசு செயலற்றதாக உள்ளது. இந்த துரதிர்ஷ்ட நிலையை ஏற்க இயலாது. எனவே உடனடியாக உத்தரகாண்ட் மாநில அரசை டிஸ்மிஸ் செய்ய வேண்டும் என்று பொரிந்து தள்ளியுள்ளார்.












Click it and Unblock the Notifications