Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

13ஏ சட்ட திருத்த விவகாரம்: 4ம் தேதி இந்தியா வரும் ராஜபக்சேவின் தம்பி பாசில்

Subscribe to Oneindia Tamil

Mahinda Rajapakse sibling as special envoy to India on Sri Lanka's 13A
கொழும்பு: இலங்கை அதிபர் மகிந்தா ராஜபக்சேவின் தம்பி பாசில் ராஜபக்சே வரும் 4ம் தேதி இந்தியா வருகிறார்.

இலங்கையில் நடந்த உள்நாட்டுப் போரை முடிவுக்கு கொண்டு வரவும், இனப் பிரச்சனைக்கு தீர்வு காணவும் 1987ம் ஆண்டு ஜூலை மாதம் அப்போதைய இலங்கை அதிபர் ஜெயவர்த்தனேவுக்கும், இந்திய பிரதமர் ராஜீவ் காந்திக்கும் இடையே ஒரு ஒப்பந்தம் கையெழுத்தானது. அதன்படி ஆட்சியில் தமிழர்களும் பங்குகொள்ளும் வகையில் இலங்கை அரசியல் சட்டத்தின் 13ஏ பிரிவில் திருத்தம் செய்யப்பட்டது. ஆனால் அந்த சட்டத்தை தற்போதைய ராஜபக்சே அரசு செயல்படுத்தவில்லை.

வரும் செப்டம்பர் மாதம் தமிழர்கள் அதிகம் வசிக்கும் வடக்கு மகாண கவுன்சில் தேர்தல் நடக்கவிருக்கிறது. இந்நிலையில் தமிழர்கள் ஆட்சியில் பங்குகொள்ளாத முடியாதபடி 13ஏ சட்டத்தில் மாற்றம் கொண்டு வந்து அதை நீர்த்துப் போகச் செய்ய இலங்கை அரசு முயற்சி செய்து வருகிறது. ஆனால் வடக்கு மாகாண கவுன்சில் தேர்தல் முடியும்வரை 13ஏ சட்டதிருத்தத்தை கிடப்பில் போடுமாறு இந்தியா ராஜபக்சே அரசை வலியுறுத்தியுள்ளது.

கடந்த மே மாதம் வெளியுறவுத் துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் இலங்கை வெளியுறவுத் துறை அமைச்சர் ஜி.எல்.பெரீஸை தொலைபேசியில் தொடர்புகொண்டு 13ஏ சட்டத்தை பாராபட்சமாக திருத்தக் கூடாது என்று வலியுறுத்தினார். ஆனால் ராஜபக்சேவோ ராஜீவ் காந்தி-ஜெயவர்த்தனே ஒப்பந்தத்தை மீறவில்லை என்றும், சட்ட திருத்தம் பற்றி நாடாளுமன்ற தேர்வுக்குழு தான் தீர்மானிக்கும் என்றும் தெரிவித்தார். இது குறித்து அரசியல் கட்சிகள் தங்கள் கருத்துகளை வரும் 9ம் தேதி நடக்கும் நாடாளுமன்ற தேர்வுக்குழு கூட்டத்தில் தெரிவிக்கலாம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இந்த நாடாளுமன்ற தேர்வுக்குழு கூட்டத்தில் பங்கேற்கபதில்லை என்று தமிழ் தேசிய கூட்டணி முடிவு செய்துள்ளது. இந்நிலையில் அதிபர் ராஜபக்சேவின் தம்பி பாசில் ராஜபக்சே வரும் 4ம் தேதி கொழும்பில் இருந்து புறப்பட்டு டெல்லி வருகிறார். அவர் வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன் ஆகியோரை சந்தித்து 13ஏ சட்டதிருத்தம் உள்ளிட்டவை குறித்து பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

முன்னதாக தமிழ் தேசிய கூட்டணி கட்சியினர் டெல்லி வந்து பிரதமர் மன்மோகன் சிங்கை சந்தித்து 13ஏ சட்டத்தை நீர்த்துப் போக வைக்க இலங்கை அரசு செய்து வரும் செயல்கள் குறித்து தெரிவித்தனர். மேலும் இந்த சட்டத்தில் மாற்றும் எதுவும் கொண்டு வரவிடாமல் செய்ய நடவடிக்கை எடுக்குமாகறு அவர்கள் மன்மோகன் சிங்கை கேட்டுக் கொண்டனர்.

பாசில் ராஜபக்சே பொருளாதார மேம்பாடு அமைச்சராக இருப்பதுடன் அவரது அதிபர் சகோதரரின் அரசியல் ஆலோசகராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+