Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

இடதுசாரிகளின் மூன்றாவது அணி.. அரசியல் கட்சிகளுக்கு பிரகாஷ் காரத் அழைப்பு!

Subscribe to Oneindia Tamil

Prakash Karat calls for secular third front
மதுரை: தேசிய அளவில் இடதுசாரிகள் அமைக்கும் மூன்றாவது அணியில் மதச்சார்பற்ற ஜனநாயகக் கட்சிகள் இணைய வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச்செயலாளர் பிரகாஷ் காரத் கேட்டுக் கொண்டுள்ளார்.

மதுரையில் நேற்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் பேசிய அவர், காங்கிரஸ் தலைமையிலான மத்திய அரசு பெரும் முதலாளிகள் கொள்ளை லாபம் சம்பாதிக்கவே வழிவகுத்து செயல்படுகின்றது. இயற்கை எரிவாயு விலை இரு மடங்கு உயர்த்தப்பட்டிருக்கிறது. 3 வது முறையாக பெட்ரோல் விலை உயர்த்தப்பட்டுள்ளது. இதன் காரணமாக அத்தியாவசிய பொருட்களின் விலை தாறுமாறாக உயரும் அபாயம் உள்ளது.

நடப்பு ஆண்டுக்கான பட்ஜெட்டில் ரூ. 5 லட்சம் கோடியை வரி சலுகையாக பெரும் முதலாளிகளுக்கு மத்திய அரசு வழங்கியிருக்கிறது. பாரதிய ஜனதா கட்சி பின்பற்றிய அதே கொள்கையைத் தான் காங்கிரசும் தொடர்ந்து பின்பற்றி வருகின்றது. குஜராத் முதல்வர் நரேந்திர மோடியை பாரதிய ஜனதா கட்சி தமது பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துகிறது. அவரும் பெரும் நிறுவனங்களுக்கு நிலமும், மின்சாரமும் இன்னும் பல வளங்களை இலவசமாக தருகிறார். எனவே, அவரது தலைமையில் மத்தியில் அரசு அமையுமானால், இந்தியாவில் எந்த மாற்றத்தையும் எதிர்பார்க்க முடியாது. காங்கிரசுக்கு மாற்று என பாரதிய ஜனதா கட்சியைக் கூறுவதை மக்கள் ஏற்க மாட்டார்கள். மக்கள் விரோத கொள்கைகளில் இரு கட்சிகளும் ஒரே நிலையில் தான் உள்ளனர்.

மக்கள் நலன், மதசார்பின்மை ஆகியவற்றின் அடிப்படையிலான மாற்று கொள்கைகளுக்கு தேவை ஏற்பட்டிருக்கிறது. அதனை இடதுசாரிகளால் மட்டுமே கொடுக்க முடியும். எனவே, மதசார்பற்ற ஜனநாயக கட்சிகள் அனைத்தும் இடதுசாரி கூட்டணியை ஆதரித்து மூன்றாவது அணியை உருவாக்க வேண்டும் என்றார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+