தூங்கிக் கொண்டிருந்த கணவரின் 'மர்மத்தை' நறுக்கிய பெண்ணுக்கு ஆயுள்!
கலிபோர்னியா: அமெரிக்காவின் கலிபோர்னியாவில் தூங்கிக் கொண்டிருந்த தனது கணவரின் மர்ம உறுப்பை நறுக்கி தனியாக துண்டித்த பெண்ணுக்கு ஆயுள் தண்டனை தரப்பட்டுள்ளது.
மர்ம உறுப்பை நறுக்கி அதைக் குப்பைத் தொட்டியில் போட்டு விட்டார் அந்தப் பெண்மணி.
அப்பெண்ணின் பெயர் காத்தரின் கியூ. 50 வயதான இவர் 7 வருடத்திற்குப் பிறகுதான் பரோலிலேயே வெளியே வர முடியும்.
முன்னதாக கியூ தரப்பில் ஆஜரான வக்கீல்கள் வாதிடுகையில், கியூவுக்கு மன நலப் பிரச்சினை இருந்தது. சிறு வயது முதலே அவர் வீட்டு வன்முறைக்கு இலக்கானவர். தனது கணவராலும் கொடுமைப்படுத்தப்பட்டார். இந்த நிலையில்தான் இச்சம்பவம் நடந்து விட்டது என்றார்.
ஆனால் கியூவின் முன்னாள் கணவரோ, எனக்கு பாதி வாழ்க்கை போச்சு, எனது அடையாளம் போச்சு என்று புலம்பியுள்ளார்.
கடந்த 2011ம் ஆண்டு ஜூலை மாதம் இச்சம்பவம் நடந்தது. தனது கணவருக்கு தூக்க மாத்திரை கொடுத்துள்ளார் கியூ. பின்னர் அவர் தூங்க ஆரம்பித்ததும் கத்தியை எடுத்து நறுக்கி விட்டார். தனது கணவரை கியூ கட்டிப் போட்டு விட்டு இந்தக் காரியத்தை செய்ததாகவும் கூறப்படுகிறது.
விவாகரத்து கோரி இருவரும் அந்த சமயத்தில் மனு செய்திருந்தனர்.












Click it and Unblock the Notifications