இன்று நள்ளிரவு முதல் என்.எல்.சி. ஊழியர்கள் காலவரையற்ற வேலை நிறுத்தம்!

என்.எல்.சி. நிறுவனத்தின் 5% பங்குகளை விற்பனை செய்ய மத்திய அரசு முடிவு செய்தது. இதற்கு அனைத்து அரசியல் கட்சிகளும் என்.எல்.சி. ஊழியர்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். மேலும் இன்று இரவு முதல் காலவரையற்ற வேலை நிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக ஊழியர்கள் அறிவித்திருந்தனர்.
இருப்பினும் மத்திய அரசு தமது நிலைப்பாட்டில் எந்த ஒரு மாற்றத்தையும் அறிவிக்கவில்லை. இதைத் தொடர்ந்து இன்று இரவு 10 மணி முதல் காலவரையற்ற வேலை நிறுத்தப் போராட்டம் தொடங்குகிறது. ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டம் இரண்டு அல்லது 3 நாட்கள் தொடர்ந்து நீடித்தால் மின் உற்பத்தி முழுமையாக பாதிக்கப்பட்டு தென்னிந்தியா முழுவதும் மின்வெட்டு ஏற்படும் அபாயம் உள்ளது.
நெய்வேலி முதல் அனல்மின் நிலையத்தில் 600 மெகாவாட்டும், 2-வது அனல் மின்நிலையத்தில் 1470 மெகாவாட்டும், முதல் அனல் மின் நிலையம் விரிவாக்கத்தில் 420 மெகாவாட்டும் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. மொத்தம் 2490 மெகாவாட் உற்பத்தி திறன் கொண்டது. இதில் சராசரியாக 2ஆயிரம் மெகாவாட் உற்பத்தி ஆகும். இதில் 1200 மெகா வாட் தமிழ்நாட்டுக்கு அனுப்பப்படுகிறது. மீதி மின்சாரம் அனைத்தும் மத்திய தொகுப்புக்கு அனுப்பப்படுகிறது. அவற்றை மத்திய மின் பகிர்மான அமைப்பு புதுச்சேரி, கேரளா, ஆந்திரா, கர்நாடகா ஆகிய மாநிலங்களிக்கு பகிர்ந்தளிக்கிறது.
இன்று இரவு தொழிலாளர்கள் வேலை நிறுத்தம் தொடங்கியதும் அனைத்து கருவிகளையும் இயக்காமல் வெளியேறிவிடுவர்.இ இதனால் படிப்படியாக மின் உற்பத்தி தானாகவே நின்றுவிடும். நாளை மாலைக்குள் பாதி அளவுக்கு மேல் மின் உற்பத்தி முடங்கிவிடும். அதைத் தொடர்ந்து விரைவிலேயே முற்றிலும் மின் உற்பத்தி நின்றுவிடும்.
-
அமெரிக்காவால் ஈரானுக்கு தங்க புதையல்.. ஹார்முஸ் ஜலசந்தியில் கப்பல்களுக்கு டோல்கேட்.. பெரிய திட்டம் -
"தங்கம் விலை டமால்.. ரூ.12,500 வரை கூட போகலாம்.." ஆனந்த் சீனிவாசன் மெகா இன்ப செய்தி -
சிறகடிக்க ஆசை: முத்து மீனா வாழ்க்கையில் நடந்த நல்ல விஷயம்.. சந்தோஷத்தில் விஜயா! ரோகிணி செய்த செயல் -
ஆட்டத்தை ஆரம்பிச்சிட்டாரு அமித் ஷா.. எடப்பாடி பழனிசாமிக்கு 165 சீட் தானா? லீக்கானது உத்தேச பட்டியல் -
கூட்டுறவு வங்கிகளில் நகைக்கடன் தள்ளுபடி யாருக்கெல்லாம் உறுதி? இந்த ஒரு தப்பு மட்டும் செஞ்சுடாதீங்க -
அப்போவே வார்னிங் கொடுத்தேன்.. அமெரிக்காதான் கேட்கல! போட்டு உடைத்த கத்தாரின் எரிசக்தித்துறை அமைச்சர் -
"பாகிஸ்தானுக்கு தண்ணீர் கொடுக்க முடியாது.." சர்வதேச அரங்கில் லெப்ட் அண்ட் ரைட் வாங்கிய இந்தியா! -
கண்ட்ரோல் எடுத்த அமித் ஷா.. பவர் போன எடப்பாடி.. இனி டெல்லி தர்பார்.. அதிமுகவின் பிடி நழுவுகிறது? -
2 கேஸ் சிலிண்டர் இருக்கா? கேஸ் கனெக்ஷனில் செய்ய வேண்டிய ஒரு மாற்றம்.. இல்லாவிட்டால் ரத்தாக வாய்ப்பு -
மோடியின் பணமதிப்பிழப்பால் மாடியிலிருந்து விழுந்து செத்தாரா பாகிஸ்தானின் ஜாவேத் கானானி? துரந்தர் 2! -
1 மணி ஃப்ளைட்.. இரவே வீடியோ கால்.. தாமரையில் போட்டியிடுங்க.. டிடிவி, அன்புமணிக்கு அமித் ஷா செக்? -
என்னது தனித்து போட்டியா? உங்க சீட்டே வேண்டாம்.. விஜய் முடிவால் தெறித்து ஓடும் தவெக நிர்வாகிகள்












Click it and Unblock the Notifications