ரயில்வே பதவிக்கு லஞ்சம்: அரசு தரப்பு சாட்சியாக மட்டும் பன்சால் சேர்ப்பு: காப்பாற்ற சிபிஐ முயற்சி?

ரயில்வே வாரிய உறுப்பினர் மகேஷ்குமாருக்கு, நல்ல காசு சம்பாதிக்க உதவும் உயர் பதவி வாங்கித் தருவதாகக் கூறி, ரயில்வே அமைச்சராக இருந்த பவன்குமார் பன்சாலின் உறவினர், விஜய் சிங்லா ரூ. 90 லட்சம் லஞ்சம் பெற்றார். இது முன்பணம் தான். மொத்தமாக ரூ. 10 கோடி லஞ்சம் தர மகேஷ்குமார் ஒப்புக் கொண்டிருந்தார்.
லஞ்சம் கைமாறியபோது இருவரையும் சிபிஐ கையும் களவுமாகப் பிடித்தது.
இந்த விவகாரத்தில் பன்சாலுக்கும் தொடர்பு இருப்பதாக, குற்றம் சாட்டப்பட்டதையடுத்து அவர், ரயில்வே அமைச்சர் பதவியை ராஜினாமா செய்தார்.
இந்நிலையில் இந்த வழக்கை விசாரித்து வரும் சி.பி.ஐ. குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. அதில், விஜய் சிங்லா, மகேஷ் குமார் உள்ளிட்ட 10 பேரின் பெயர்கள் இடம் பெற்றுள்ளன.
ஆனால், இந்த முறைகேட்டில் பன்சால் நேரடியாக சம்பந்தப்படவில்லை என்பதால் அவரது பெயர் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்படவில்லை. அரசுத் தரப்பு சாட்சியாக மட்டும் சேர்க்கப்பட்டுள்ளார்.
இதற்கு பா.ஜ.க கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.












Click it and Unblock the Notifications