ரூ.17 கோடிக்கு ஏலத்தில் சென்ற பட்டியாலா மகாராஜாவின் வெள்ளி முலாம் பூசிய டின்னர் செட்
லண்டன்: பட்டியாலா மகாராஜாவுக்கு சொந்தமான சுமார் 500 கிலோ எடையுள்ள டின்னர் செட் ரூ.17 கோடிக்கு ஏலத்தில் சென்றுள்ளது.
பட்டியாலா மகாராஜா புபிந்தர் சிங் பயன்படுத்திய 1,400 ஐட்டங்கள் உள்ள வெள்ளி முலாம் பூசப்பட்ட டின்னர் செட் லண்டனில் உள்ள கிறிஸ்டீஸ் ஏல நிறுவனத்தில் ஏலத்திற்கு விடப்பட்டது. சுமார் ஒரு நூற்றாண்டுக்கு முன்பு பயன்படுத்தப்பட்ட 500 கிலோ எடை கொண்ட அந்த செட் ரூ.17 கோடிக்கு ஏலத்தில் சென்றுள்ளது.
எதிர்பார்த்த தொகையை விட இரண்டு மடங்கு அதிக தொகைக்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளது. இந்த டின்னர் செட் லண்டனைச் சேர்ந்த கோல்ட்ஸ்மித்ஸ் அன்ட் சில்வர்ஸ்மித்ஸ் கம்பெனியால் செய்யப்பட்டது.
1922ம் ஆண்டில் எட்டாம் எட்வர்ட் மன்னராக ஆன வேல்ஸ் இளவரசர் பட்டியாலா வந்தபோது இந்த டின்னர் செட் வரவழைக்கப்பட்டது. அவர் வருகையின்போது மகாராஜா இளவரசருடன் போலோ விளையாட்டு, துப்பாக்கிச்சுடுதல் ஆகியவற்றில் ஈடுபட்டுள்ளார்.
இந்தியாவில் சொந்தமாக விமானம் வைத்திருந்த முதல் நபர் என்ற பெருமை பட்டியாலா மகாராஜாவைச் சேரும் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த டின்னர் செட் இது தான்:















Click it and Unblock the Notifications