உ.பி மருத்துவ மாணவி கற்பழித்து கொலை: துணைவேந்தரை கைது செய்யக் கோரி மறியல்
அம்ரோகா: உத்தரபிரதேசத்தில் மருத்துவ மாணவி கற்பழித்து கொலை செய்யப்பட்ட வழக்கில் அம்மாணவி படித்து வந்த பல்கலைகழக துணைவேந்தர் மற்றும் அவரது மகனை கைது செய்யக்கோரி மக்கள் மறியலில் ஈடுபட்டதால், டெல்லி-லக்னோ நெடுஞ்சாலையில் ஐந்து மணிநேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
சில தினங்களுக்கு முன்னர் உத்தரபிரதேச மாநிலம் அம்ரோகா மாவட்டத்தில் உள்ள தீர்த்தங்கர் மகாவீர் பல்கலைக்கழக மருத்துவக்கல்லூரியில் பயின்று வந்த மாணவி ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யப்பட்டார்.
தற்போது மாணவியின் உடல் பிரேதபரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ள நிலையில், கற்பழிப்பு தொடர்பாக மறியலில் சிலர் ஈடுபட்டுள்ளனர். அம்மருத்துவ மாணவியின் கொலை மற்றும் கற்பழிப்பில் பல்கலைக்கழக துணைவேந்தர் சுரேஷ் ஜெயின் அவரது மகன் மணீஷ் ஜெயின் உள்பட 3 பேருக்கு தொடர்பு இருப்பதாக அவர்கள் சந்தேகம் தெரிவித்துள்ளனர். ஆதலால் உடனடியாக அவர்களை உடனடியாக கைது செய்யக்கோரி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட பிரச்சினையால்,டெல்லி-லக்னோ நெடுஞ்சாலையில் 5 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
பல்கலைக்கழக வளாக போலீசார் மாணவியின் கற்பழிப்பு மற்றும் கொலை குறித்து வழக்குப்பதிவு செய்து குற்றவாளி யார் என்று தீவிர விசாரணை நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.











Click it and Unblock the Notifications