For Quick Alerts
For Daily Alerts
Just In
அவதூறு வழக்கு: செப்.11-ல் விஜய்காந்த் ஆஜராக தஞ்சாவூர் நீதிமன்றம் உத்தரவு!
தஞ்சாவூர்: தமிழக அரசு தொடர்ந்த அவதூறு வழக்கில் செப்டம்பர் 11ந் தேதி நேரில் ஆஜராக தேமுதிக தலைவர் விஜயகாந்துக்கு தஞ்சாவூர் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
தஞ்சாவூரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 18-ந் தேதி நடைபெற்ற கூட்டத்தில் தமிழக அரசு மற்றும் முதல்வர் குறித்து விஜயகாந்த் அவதூறாகப் பேசினார் என்று தஞ்சாவூர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் இன்று அவர் ஆஜராக வேண்டும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது.
ஆனால் இன்றைய வழக்கு விசாரணையின் போது விஜயகாந்த் நேரில் ஆஜராகவில்லை. இதைத் தொடர்ந்து வழக்கு விசாரணையை செப்டம்பர் 11ந் தேதிக்கு ஒத்தி வைத்த நீதிபதி அன்று விஜயகாந்த் நேரில் ஆஜராகவும் உத்தரவிட்டார்.
Comments
English summary
Tanjore court today ordered issue of summons to DMDK leader Vijaykanth to appear on Sep. 11 in connection with a defamation case filed against him by the state government.
Story first published: Wednesday, July 10, 2013, 13:27 [IST]