For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

55 வயது மின்னல்கொடியிடம் செக்ஸ் அராஜகம்... 33 வயது ராசு தர்ம அடி கொடுத்து கைது

Google Oneindia Tamil News

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே 55 வயதுப் பெண்ணிடம் பாலியல் தொந்தரவு செய்து சில்மிஷம் செய்த 33 வயது நபரை பொதுமக்கள் பிடித்து தர்ம அடி கொடுத்து பின்னர் போலீஸிடம் ஒப்படைத்தனர்.

பெரம்பலூர் அருகே உள்ள பேரளி கிராமத்தைச் சேர்ந்தவர் மின்னல்கொடி. இவருக்கு 55 வயதாகிறது. மணி என்பவரின் மனைவி ஆவார்.

சம்பவத்தன்று மாலையில் தனது வீட்டுக்கு வெளியே உட்கார்ந்து பாத்திரம் விளக்கி்க கொண்டிருந்தார். அப்போது நன்கு குடித்து விட்டு வந்த ஒரு நபர் மின்னல்கொடியைப் பார்த்து நின்று விட்டார். பின்னர் அவரிடம் அத்துமீறி நடக்க முயன்றார். இதைப் பார்த்து மின்னல் கொடி கத்திக் கூச்சல் போட்டார்.

இதைப் பார்த்து அக்கம் பக்கத்தினர் ஓடிவந்தனர். மின்னல்கொடியிடம் ஒரு நபர் அத்துமீறியதைப் பார்த்து அவரைப் பிடித்து சரமாரியாக அடித்து உதைத்தனர். பின்னர் போலீஸாரிடம் ஒப்படைத்தனர்.

விசாரணையில் அந்த நபரின் பெயர் ராசு என்பதும், 33 வயதாவதும், மழவராயநல்லூர் கிராமத்தைச் சேர்ந்தவர் என்பதும் தெரிய வந்தது. இதையடுத்து போலீஸார் அவரைக் கைது செய்தனர்.

English summary
Perambalur police have arrested a 33 year old man for teasing 55 yr old woman near Perambalur.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X