ஸ்பெக்ட்ரம் வழக்கு: நீரா ராடியா உரையாடலை ஆதாரமாக்க கோரிய சிபிஐ மனு தள்ளுபடி!
Subscribe to Oneindia Tamil

ஸ்பெக்ட்ரம் ஒதுக்கீட்டு ஊழல் வழக்கில் பெரும் புயலைக் கிளப்பியது நீரா ராடியாவின் தொலைபேசி உரையாடல்கள். இதைத் தொடர்ந்து இந்த வழக்கில் சிபிஐ சாட்சியாக நீரா ராடியா சேர்க்கப்பட்டார். அவர் டெல்லி சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜராகி சாட்சியமும் அளித்திருந்தார்.
இந்நிலையில் முறைகேட்டில் ஈடுபட்ட சிலருடன் நீரா ராடியா பேசிய தொலைபேசி உரையாடல்களின் பதிவுகளை ஆதாரமாக ஏற்றுக் கொள்ளக் கோரி சிறப்பு நீதிமன்றத்தில் சிபிஐ சார்பில் மனுத் தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதற்கு முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா கடும் எதிர்ப்பும் தெரிவித்திருந்தார். இன்று நடைபெற்ற விசாரணையின் போது சிபிஐ மனுவை நீதிபதி ஓ.பி. ஷைனி தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications