தலைவர்கள் வருவதற்கு முதல்வர் அனுமதிக்க வேண்டும் - இளவரசன் தந்தை

Subscribe to Oneindia Tamil

Ilavarasan's father wants TN govt should permit leaders to pay homage
தர்மபுரி: எனது மகன் இளவரசின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள அரசியல் தலைவர்களுக்கு முதல்வர் ஜெயலலிதா அனுமதி தர வேண்டும் என்று இளவரசனின் தந்தை இளங்கோவன் கோரிக்கை விடுத்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறுகையில், எனது மகன் உடலுக்கு அஞ்சலி செலுத்தவும், உடல் அடக்கத்தில் கலந்து கொள்ளவும், தலைவர்கள் தொல்.திருமாவளவன், ஆர் நல்லக்கண்ணு, தா.பாண்டியன், கி.வீரமணி, வைகோ உள்ளிட்ட தலைவர்களையும், அனைத்து கட்சி பிரமுகர்களையும் அனுமதிக்க வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்.

இதற்கான அனுமதியை முதல்வர் தருவார் என்ற நம்பிக்கையுடன் அவரது உத்தரவுக்காக காத்து இருக்கிறேன் என்றார்.

தர்மபுரி மாவட்டத்தில் ஏற்கனவே போலீஸ் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. மேலும் தலைவர்கள் உள்ளே வருவதற்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+