For Daily Alerts
Just In
ஜார்க்கண்டில் ஒரே இரவில் 4 சிறுமிகள் 20 பேரால் கற்பழிப்பு
ஜார்க்கண்ட் மாநிலம் பாக்கூர் மாவட்டம் லிதிபாரா காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கிராமத்தில் நேற்று இரவு 4 சிறுமிகளை 20க்கும் மேற்பட்டோர் சேர்ந்து கற்பழித்துள்ளனர். இந்த கொடூர சம்பவம் குறித்து அந்த கிராமத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
இது குறித்து மாவட்ட எஸ்பி ஒய்.எஸ். ரமேஷ் கூறுகையில்,
நேற்று இரவு 20க்கும் மேற்பட்டோர் 4 சிறுமிகளை கற்பழித்ததாக சம்பவம் நடந்த கிராமத்தைச் சேர்ந்தவர்கள் தெரிவித்தனர். அந்த சிறுமிகள் மருத்துவ பரிசோதனைக்கு அனுப்பி வைக்கப்படுவார்கள். குற்றவாளிகளை பிடிக்க உதவி செய்வதாக கிராமத்தினர் உறுதி அளித்துள்ளனர் என்றார்.
ஒரே இரவில் 4 சிறுமிகள் கற்பழிக்கப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
English summary
In a shocking incident, four minor girls were allegedly raped by a gang of more than 20 people in Pakur district. Villagers informed the police that more than 20 people raped the minors last night at a place which falls under the control of the Litipara police station, Superintendent of Police (SP) YS Ramesh told reporters here today.
Story first published: Monday, July 15, 2013, 16:40 [IST]