For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

விஜயகாந்த் கோர்ட்டில் இப்படியா நடந்து கொள்வது.. நீதிபதி கண்டனம்

Google Oneindia Tamil News

HC justice slams Vijayakanth
மதுரை: எதிர்க்கட்சித் தலைவராக இருக்கும் விஜயகாந்த் கோர்ட்டில் இப்படியா நடந்து கொள்வது. இனிமேல் இப்படியெல்லலாம் நடக்கக் கூடாது என்று மதுரை உயர்நீதிமன்றக் கிளை அறிவுறுத்தியுள்ளது.

சமீபத்தில் நாகர்கோவில் நீதிமன்றத்தில், அவதூறு வழக்கில் ஆஜராவதற்காக வந்திருந்தார் விஜயகாந்த். அப்போது அவருடன் பெரும் திரளான தேமுதிகவினரும், கட்சி வக்கீல்களும் வந்தனர்.

அப்போது அரசுத் தரப்பு மற்றும் அதிமுகவக்கீல்களுக்கும், தேமுதிகவினருக்கும் இடையே பெரும் ரகளை ஏற்பட்டது. கோர்ட்டில் மாஜிஸ்திரேட் முன்பாகவே அடிதடியில் இரு தரப்பினரும் இறங்கினர்.

இதையடுத்து கோட்டாறு போலீஸார், விஜயகாந்த் மீது கொலை முயற்சி உள்ளிட்ட பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்தனர். இதையடுத்து முன்ஜாமீன் கோரி மதுரை உயர்நீதிமன்றக் கிளையில் மனு செய்தார் விஜயகாந்த்.

இந்த மனுவை இன்று நீதிபதி மாலா விசாரித்து முன்ஜாமீன் வழங்கி உத்தரவிட்டார். அரப்போது, நீதிபதி கூறுகையில், எதிர்க்கட்சித் தலைவரான விஜயகாந்த் நடந்து கொண்ட முறை சரியில்லை. நீதிமன்றத்தில் இதுபோன்று நடந்துகொள்வது கண்டனத்துக்கு உரியது என்று தெரிவித்தார்.

English summary
Madurai HC bench justice Mala condemned the behaviour of DMDK president Vijayakanth for his behaviour in Nagerkovil court.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X