கூடங்குளம் அணுஉலைக்கு எதிர்ப்பு: கறுப்புக் கொடி போராட்டம்…3 மாவட்ட மீனவர்கள் பங்கேற்பு

Subscribe to Oneindia Tamil

Kudankulam plant produces power, PMANE plans agitation
கூடங்குளம்: கூடங்குளம் அணுஉலைக்கு எதிர்ப்பு தெரிவித்து தென் மாவட்டங்களில் இன்று கறுப்புக்கொடி போராட்டம் நடத்தப்போவதாக அணு உலை எதிர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.

கூடங்குளம் அணுமின்நிலையத்தில் மின்உற்பத்திக்கன பணிகள் தொடங்கியுள்ளது. இதனையடுத்து அணுஉலை எதிர்ப்பாளர்கள் நேற்று இடிந்தகரையில் அவசர ஆலோசனையில் ஈடுபட்டனர்.

கூட்டத்தில், மீனவர்கள் அனைவரும் அணு மின் நிலைய பாதிப்பில் இருந்து தங்களை காக்க கோரி இறைவனை வேண்டினர். அணு உலைக்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை மாவட்டத்தில் உள்ள இடிந்தகரை, கூத்தங்குழி, கூடுதாழை, பெருமணல் உள்ளிட்ட 13 கடலோர கிராமங்களில் இன்று முதல் மீனவர்கள் யாரும் கடலுக்கு மீன்பிடிக்க செல்ல கூடாது என முடிவெடுக்கப்பட்டது.

அணு மின் நிலையத்தை எதிர்க்கும் வகையில் மீனவ கிராமங்களில் உள்ள வீடுகளில் கறுப்பு கொடி ஏற்றவும் முடிவு செய்யப்பட்டுள்ளது. இதன்படி இன்று காலை முதலே மீனவகிராமங்களில் வீடுகள் தோறும் கறுப்புக் கொடி ஏற்றப்பட்டுள்ளது.

மேலும் இன்று இடிந்தகரை வீதிகளில் அணு கசிவு ஏற்பட்டால் மனிதர்கள் எப்படி இறப்பார்கள் என்பதை விளக்கும் வகையில் மாலை 4 மணிக்கு மரணத்திரள் போராட்டம் நடத்தப்படும் என்று போராட்டக்குழு ஒருங்கிணைப்பாளர் உதயகுமார் தெரிவித்துள்ளார்.

அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நடைபெறாமல் தடுக்க 2000 போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டுள்ளனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+