For Daily Alerts
Just In
பூனை செத்துப் போனதற்காக தற்கொலை செய்த இளம் பெண்!
ஹைதராபாத்தில் இந்த பரிதாபச் சம்பவம் நடந்துள்ளது. அந்தப் பெண்ணின் பெயர் சொர்ணலதா. 25 வயதாகிறது. இவர் ஒரு பூனை வளர்த்து வந்தார். அந்த மியாவ் இவருடன் செல்லமாக இருந்து வந்தது. பூனையைப் பிரிந்து சொர்ணலதாவால் இருக்க முடியாதாம், அப்படி ஒரு பாசம், செல்லம்.
இந்த நிலையில் 2 நாட்களுக்கு முன்பு அந்த செல்லப் பூனை இறந்து போய் விட்டது. இதனால் பெரும் வேதனை அடைந்தார் சொர்ணலதா. இந்த நிலையில், தனது வீட்டில் மண்ணெண்ணெய்ஊற்றி தீவைத்துக் கொண்டு விட்டார் சொர்ணலதா. இதில் தீயில் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
தற்கொலைக்கு முன்பு கடிதம் ஒன்றையும் எழுதி வைத்துள்ளார் சொர்ணலதா. அதில், எனது பூனையே போய் விட்டது. எனவே அதைத் தாங்க முடியாமல் தற்கொலை செய்து கொள்வதாக கூறியுள்ளார் சொர்ணலதா.
அம்பர்பேட்டை போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர்.
Comments
English summary
A 25-year-old woman on Monday allegedly committed suicide by setting herself on fire at Amberpet in Hyderabad as she was "upset" over the death of her cat, police said. Swarnalatha, who was very fond of her cat, poured kerosene and immolated herself at her house after her pet died two days ago, reportedly in the rains lashing the city, they said.
Story first published: Tuesday, July 16, 2013, 11:33 [IST]