என்னை நம்ப வைத்து, நடித்து ஏமாற்றி விட்டார் ஸ்ரீசாந்த் - டிராவிட் விரக்தி வாக்குமூலம்
டெல்லி: ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் விவகாரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ராகுல் டிராவிட் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் தன்னை சம்பந்தப்பட்ட மூன்று கிரிக்கெட் வீரர்களுமே ஏமாற்றி விட்டதாக கூறியுள்ளார் டிராவிட்.
சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஐபிஎல் தொடரின்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் மற்றும் அஜீத் சண்டிலா ஆகியோர் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டுக் கைதாகினர்.
இதுதொடர்பான வழக்கை டெல்லி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் டிராவிடின் வாக்குமூலத்தைப் போலீஸார் பெற்றுள்ளனர். அதில் இந்த வீரர்கள் குறித்து வேதனை வெளியிட்டுள்ளார் டிராவிட்.

என்னை ஏமாற்றி விட்டனர்
இந்த மூன்று பேர் மீதும் நான் நிறைய மதிப்பும், நம்பிக்கையும் வைத்திருந்தேன். ஆனால் அவர்கள் என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டனர்.

நடத்தை சரியில்லை
அவர்களது நடத்தை சரியில்லாமல் போய் விட்டது. இது எனக்கு பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

சந்தேகமே வரவி்ல்லை
இந்த மூன்று பேர் மீதும் எனக்கு சந்தேகமே வராத அளவுக்கு நடித்துள்ளனர். ஒவ்வொரு போட்டியிலிரும் வீரர்கள் விளையாடும் விதத்தைப் பார்த்துத்தான் அடுத்த போட்டிக்கு நான் வீரர்களை தேர்வு செய்வேன் என்று கூறியுள்ளார் டிராவிட்.

வீட்டில் வைத்து வாக்குமூலம்
டிராவிடின் வீட்டிற்குச் சென்ற தனிப்படையினர் அவரது வாக்குமூலத்தைப் பெற்றுள்ளனர்.

டிராவிட் சாட்சி
இந்தவழக்கில் டிராவிட் ஒரு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் மீது எந்த சந்தேகமும் இல்லை என்று போலீஸார் ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
RCB-க்கு வாழ்த்து சொன்ன டி.கே.சிவகுமார்! வார்னிங் கொடுத்த சித்தராமையா! இந்த முறை தவறு நடக்கக்கூடாது! -
வாள் தூக்கி நின்ற வெங்கடேஷ் ஐயர்.. ப்ளே ஆஃப் வந்தாலே ஆளை கையில் பிடிக்க முடியாது.. இம்பேக்ட் ஆட்டம்! -
நீதான்யா ஸ்பின்னர்.. எகனாமியை பாருங்கப்பா.. ஆர்சிபி வெற்றிக்கு காரணமே க்ருணால் பாண்டியா தான்! -
சோலி முடிஞ்சுது.. சொதப்பிய டாப் ஆர்டர் பேட்ஸ்மேன்கள்.. இனி குஜராத் கதி அவ்வளவு தான்! -
வைபவ் சூர்யவன்ஷிக்கு சச்சின் கொடுத்த 'சர்டிபிகேட்'! இளம் புயலின் பேட்டிங் ரகசியத்தை உடைத்த மாஸ்டர்! -
நள்ளிரவில் ஜொலிக்கும் பெங்களூர்.. RCB வெற்றியால் ரசிகர்கள் செய்த சம்பவம்.. இந்த வீடியோ பாருங்க -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்!












Click it and Unblock the Notifications