என்னை நம்ப வைத்து, நடித்து ஏமாற்றி விட்டார் ஸ்ரீசாந்த் - டிராவிட் விரக்தி வாக்குமூலம்
டெல்லி: ஐபிஎல் ஸ்பாட் பிக்ஸிங் விவகாரத்தில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் கேப்டனாக இருந்த ராகுல் டிராவிட் வாக்குமூலம் அளித்துள்ளார். அதில் தன்னை சம்பந்தப்பட்ட மூன்று கிரிக்கெட் வீரர்களுமே ஏமாற்றி விட்டதாக கூறியுள்ளார் டிராவிட்.
சில மாதங்களுக்கு முன்பு நடந்த ஐபிஎல் தொடரின்போது ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் வீரர்கள் ஸ்ரீசாந்த், அங்கீத் சவான் மற்றும் அஜீத் சண்டிலா ஆகியோர் ஸ்பாட் பிக்ஸிங்கில் ஈடுபட்டுக் கைதாகினர்.
இதுதொடர்பான வழக்கை டெல்லி போலீஸார் விசாரித்து வருகின்றனர். இந்த வழக்கில் டிராவிடின் வாக்குமூலத்தைப் போலீஸார் பெற்றுள்ளனர். அதில் இந்த வீரர்கள் குறித்து வேதனை வெளியிட்டுள்ளார் டிராவிட்.

என்னை ஏமாற்றி விட்டனர்
இந்த மூன்று பேர் மீதும் நான் நிறைய மதிப்பும், நம்பிக்கையும் வைத்திருந்தேன். ஆனால் அவர்கள் என்னை நம்ப வைத்து ஏமாற்றி விட்டனர்.

நடத்தை சரியில்லை
அவர்களது நடத்தை சரியில்லாமல் போய் விட்டது. இது எனக்கு பெருத்த ஏமாற்றத்தைக் கொடுத்துள்ளது.

சந்தேகமே வரவி்ல்லை
இந்த மூன்று பேர் மீதும் எனக்கு சந்தேகமே வராத அளவுக்கு நடித்துள்ளனர். ஒவ்வொரு போட்டியிலிரும் வீரர்கள் விளையாடும் விதத்தைப் பார்த்துத்தான் அடுத்த போட்டிக்கு நான் வீரர்களை தேர்வு செய்வேன் என்று கூறியுள்ளார் டிராவிட்.

வீட்டில் வைத்து வாக்குமூலம்
டிராவிடின் வீட்டிற்குச் சென்ற தனிப்படையினர் அவரது வாக்குமூலத்தைப் பெற்றுள்ளனர்.

டிராவிட் சாட்சி
இந்தவழக்கில் டிராவிட் ஒரு சாட்சியாக சேர்க்கப்பட்டுள்ளார். அவர் மீது எந்த சந்தேகமும் இல்லை என்று போலீஸார் ஏற்கனவே தெளிவுபடுத்தி விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.
-
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும்












Click it and Unblock the Notifications