For Daily Alerts
Just In
மோடிக்கு நல்ல புத்தி கொடு சாமி.. பூரி ஜெகநாதரிடம் வேண்டிய காங்கிரஸ்!
குஜராத் முதல்வர் நரேந்திர மோடி அண்மையில் ஒடிஷா மாநிலம் சென்று பூரி ஜெகநாதரை வழிபட்டார். பின்னர் செய்தியாளர்களிடம் பேசுகையில் ஒடிஷாவும் குஜராத்தும் ஒன்று.. ஒடிஷா மாநிலத்தவரால் குஜராத் வளர்ச்சி அடைந்தது என்று கூறினார்.
இதற்கு போட்டியாக ஒடிஷா மாநில காங்கிரஸ் மேலிடப் பொறுப்பாளரான ஹரிபிரசாத் நேற்று பூரி ஜெகநாதர் கோயிலில் வழிபாடு நடத்தினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், நாட்டை மத ரீதியாக பிளவுபடுத்தும் வகையில் பேசி வரும் குஜராத் முதல்வர் நரேந்திர மோடிக்கு நல்ல புத்தியைக் கொடுக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன். குஜராத்தில் வாழும் ஒடிஷா மாநிலத்தவருக்கு எந்த ஒரு உதவியும் மோடி செய்யவில்லை. அவர்களுக்கு ரேசன் அட்டையோ வாக்காளர் அட்டையோ இல்லாமல் கொடுக்கப்படவில்லை என்றார் அவர்.
Comments
English summary
A day after Gujarat Chief Minister Narendra Modi offering pujas at Sri Jagannth Temple at Puri, Congress prayed that the Lord give "Sad Budhi" (good sense) to BJP leader.
Story first published: Thursday, July 18, 2013, 12:49 [IST]