மரம் திருடி மாட்டிக்கிட்டாரு.... ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர்!
கிரோவ், ரஷ்யா: ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர் அலெக்ஸி நவ்லனி, அரசு கிட்டங்கியிலிருந்து மரம் திருடி மாட்டி தற்போது குற்றவாளி என்று கோர்ட்டால் அறிவிக்கப்பட்டுள்ளார்.
அவருக்கு 6 வருட சிறைத் தண்டனை கிடைக்கும் வாய்ப்புள்ளது. இதன் காரணமாக அவரது மாஸ்கோ நகர மேயராகும் கனவும் தவிடுபொடியாகியுள்ளது.
அலெக்ஸி மீது, கடந்த 2009ம் ஆண்டு அரசு கிட்டங்கியில் இருந்த 5 லட்சம் டாலர் மதிப்புள்ள மரங்களைத் திருடியதாக புகார் எழுந்தது. அப்போது அவர் மாகாண ஆளுநரின் ஆலோசகராக இருந்து வந்தார்.
இந்த வழக்கில் தற்போது நவ்லனி குற்றவாளி என்று கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. அவருக்கு 6 வருட சிறைத் தண்டனை கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. விரைவில் அவருக்கான தண்டனை விவரம் அறிவிக்கப்படும்.
மாஸ்கோ நகர மேயர் பதவிக்குப் போட்டியிடும் கனவில் இருந்து வந்தார் நவ்லனி. ஆனால் திருட்டு வழக்கில் அவர் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டுள்ளதால் அந்தக் கனவு தவிடுபொடியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications