காக்பிட்டில் பயணித்த நித்யா மேனன்: ஏர் இந்தியா விமானிகள் 2 பேர் சஸ்பெண்ட்

நடிகை நித்யா மேனன் கடந்த மாதம் ஏர் இந்தியா விமானத்தில் பெங்களூரில் இருந்து ஹைதராபாத் சென்றார். விமானம் நடுவானில் பறக்கையில் அவர் விமானிகள் அறைக்கு சென்று அங்குள்ள இருக்கையில் அமர்ந்து பயணம் செய்துள்ளார். இது குறித்து அந்த விமானத்தில் பயணம் செய்த ஒருவர் ஏர்லைன்ஸில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து நித்யா மேனனை விதிகளை மீறி தங்கள் அறையில் அமர வைத்து அழைத்துச் சென்ற விமானிகள் ஜெகன் எம் ரெட்டி மற்றும் எஸ். கிரண் ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் இந்த விவாகரம் குறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. இது போன்ற சம்பவங்கள் கடந்த சில மாதங்களாக அதிகரித்து வருவதால் விதிமுறைகளை மாற்றி அமைத்து கடும் தண்டனை வழங்குவது குறித்து சிவில் விமானப் போக்குவரத்து இயக்குனரகம் ஆலோசித்து வருகிறது.
கடந்த மே மாதம் டெல்லியில் இருந்து பெங்களூர் சென்ற ஏர் இந்தியா விமானத்தில் விமானிகள் அறை கதவு திறக்க முடியாமல் சிக்கிக் கொண்டதால் விமானி ஒருவர் அறைக்கு வெளியே இருக்க வேண்டி இருந்தது. இதையடுத்து விமானம் போபாலில் அவசரமாக தரையிறக்கப்பட்டது. மேலும் கடந்த ஏப்ரல் மாதம் ஏர் இந்தியா விமானம் ஒன்றின் 2 விமானிகளில் ஒருவர் ஓய்வு எடுக்க விமானிகள் அறையில் 2 பணிப்பெண்கள் இருந்து சிக்கினர் என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications