நடிகை லீனா மரியாபால் ஜாமீன் மனு ஜூலை 26க்கு ஒத்திவைப்பு: ஹைகோர்ட் உத்தரவு
Subscribe to Oneindia Tamil

சென்னை அம்பத்தூரில் உள்ள கனரா வங்கியில் ரூ.19 கோடி மோசடி செய்த வழக்கில் மலையாள நடிகை லீனா மரியாபால் கடந்த மே மாதம் கைது செய்யப்பட்டார்.
இந்த வழக்கில் தனக்கு ஜாமீன் வழங்க கோரி சென்னை ஐகோர்ட்டில் அவர் மனு தாக்கல் செய்திருந்ததார். இந்த மனு நீதிபதி ராஜேந்திரன் முன்பு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசு தரப்பில் ஆஜரான வக்கீல், இது மிகப்பெரிய மோசடி வழக்கு. லீனா மரியாபாலை பல இடங்களில் தேடி மிக கஷ்டப்பட்டு மும்பையில் வைத்து போலீசார் கைது செய்தனர். இவருக்கு ஜாமீன் வழங்கினால் தலைமறைவாகி விடுவார் என்று வாதம் செய்தார்.
இதையடுத்து இந்த மனு மீதான விசாரணையை வரும் 26-ந்தேதிக்கு தள்ளி வைத்து நீதிபதி உத்தரவிட்டார்.












Click it and Unblock the Notifications