2500 தமிழக மீனவர்கள் விரட்டியடிப்பு: இலங்கை கடற்படை அட்டகாசம்

Subscribe to Oneindia Tamil

ராமேஸ்வரம்: ரமேஸ்வரம் பகுதியில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற 2500 ராமேஸ்வரம் மீனவர்களை, இலங்கை கடற்படையினர் விரட்டியடித்துள்ள சம்பவம் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

ராமேஸ்வரம் கடற்கரை பகுதியில் இருந்து 684 படகுகளில் 2 ஆயிரத்து 500 க்கும் மேற்பட்ட மீனவர்கள் நேற்று மீன்பிடிக்கச் சென்றனர். அவர்கள் அனைவரும் எல்லை தாண்டி மீன்பிடிக்க வந்ததாக கூறி இலங்கை கடற்படையினர் விரட்டியடித்தனர். இதனால் மீனவர்கள் அனைவரும் மீன் பிடிக்க முடியாமல் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் பலர் கரை திரும்பி உள்ளனர். மற்றவர்கள் இந்திய கடல் எல்லையின் உட்பகுதிக்குத் திரும்பி உள்ளனர்.

வடக்கு இலங்கையைச் சேர்ந்த போரால் பாதிக்கப்பட்ட மீனவர் சங்கம் எனும் அமைப்பு சார்பில் இலங்கை அரசிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

இந்திய மீனவர்கள் எல்லை தாண்டி வந்து மீன் பிடிப்பதால், தங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுவதாகவும், எனவே, அதனை தடுத்து நிறுத்த அரசு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+