14 வயது சிறுவனுக்கு பாலியல் ஆசைகாட்டி பணம் பறித்த 22 வயது பெண்ணுக்கு 2 ஆண்டு சிறை

Subscribe to Oneindia Tamil

லண்டன்: இங்கிலாந்தில் பாலியல் ஆசை காட்டி 14 வயது சிறுவனிடம் தொடர்ந்து பணம் பறித்து வந்த 22 வயது பெண்ணுக்கு 2 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இங்கிலாந்து, டார்லிங்டன் பகுதியில் வசித்து வரும் 14 வயது சிறுவன் தனது சித்தியின் கிரெடிட் கார்ட் மூலம் கஞ்சா வாங்கி, விடுதியில் தங்கிய விபரம் அறிந்த அவனது பெற்றோர், அச்சிறுவனை மிரட்டி விசாரித்தனர். அப்போது, தன் தவறை ஒப்புக்கொண்ட சிறுவன் பணத்தை செலவழித்த விதம் பற்றிக் கூறியதைக் கேட்ட பெற்றோர் அதிர்ந்து விட்டனர்.

காரணம், 22 வயது இளம் பெண் ஒருவர் அச்சிறுவனுக்கு பாலியல் சுகம் காட்டி, போதைப் பொருளுக்கு அடிமையாக்கி அவனை வீட்டிலேயே திருட வைத்தது விசாரணையில் அம்பலமானது.

மேலும், அப்பெண்ணுடனான தொடர்பு குறித்து அச்சிறுவன் கூறும்போது, ‘ஒருநாள் அந்த பெண் என்னை வற்புறுத்தி அவளது வீட்டு தோட்டத்தில் தனியாக இருந்த கூடாரத்திற்கு அழைத்துச் சென்றாள். என்னை, வற்புறுத்தி, ஆடைகளை கழற்றி தனது ஆசைக்கு என்னை பயன்படுத்திக் கொண்டாள். இப்போது நீ அனுபவித்த சுகம் உனக்கு தொடர்ந்து தேவைப்பட்டால், பணத்தோடு என்னை தேடி வா.. உனக்கு தேவையானதை நான் தருகிறேன் என்று அந்த பெண் கூறினாள். அவள் கூறியதற்கு ஆசைப்பட்டு சித்தியின் கிரெடிட் கார்டை திருடி செலவழித்தேன்' எனத் தெரிவித்துள்ளான்.

இதனையடுத்து அச்சிறுவனின் பெற்றோர் அளித்த புகாரின் பேரின் நட்டாலி வில்லியம்ஸ் என்ற 22 வயது இளம்பெண்ணை போலீசார் கைது செய்தனர். வழக்கை விசாரித்த நீதிபதி, சிறுவனை தனது ஆசைக்கு பயன்படுத்திக் கொண்ட குற்றத்திற்காக நட்டாலிக்கு 2 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதித்து உத்தரவிட்டுள்ளார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+