23 குழந்தை பலி எதிரொலி: பீகார் முதல்வர், கல்வியமைச்சர் மீது வழக்குப் பதிய உத்தரவு
பாட்னா: பூச்சி மருந்து கலந்த மதிய உணவு சாப்பிட்ட 23 குழந்தைகள் பலியானதைத் தொடர்ந்து பீகார் முதல்வர் நிதிஷ்குமார் மற்றும் கல்வியமைச்சர் மீது வழக்குப் பதிவு செய்ய சாப்ரா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பீகார் மாநிலம், சாப்ரா மாவட்டத்தில் கடந்த 16ம் தேதி அரசு பள்ளி ஒன்றில் மதிய உணவு சாப்பிட்ட 23 குழந்தைகள் பலியான சம்பவம் நாடு முழுவதும் அதிர்ச்சியலைகளை ஏற்படுத்தியது. இந்த சம்பவத்துக்கு பொறுப்பேற்று முதல்வர் நிதிஷ்குமார் பதவி விலக வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.
விஷம் கலந்த உணவை சாப்பிட்டதாலேயே குழந்தைகள் இறந்ததாக முதல் கட்ட விசாரணையில் தெரியவந்தது.
23 பள்ளி குழந்தைகள் உயிரிழந்ததற்கு காரணமான முதல்வர் நிதிஷ்குமார், கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிடக் கோரி சாப்ரா நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், முதல்வர் நிதிஷ்குமார், கல்வித்துறை அமைச்சர் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்ய காவல்துறைக்கு உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தின் உத்தரவு பீகாரில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
1 சவரன் தங்க நகை வாங்க போறீங்களா? கடைக்காரர் போடும் கணக்கில் அதிக மாற்றமா? ஏமாறாமல் இருக்க பில் தேவை -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
அதை சொல்ல யாருக்கும் அருகதை இல்லை.. வீட்டிலும், ஆபீஸிலும் இதுதான் நடக்குது செல்வராகவன் ஆதங்கம் -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
48 அவுட் ஆஃப் 234! திமுக கூட்டணியில் இதுவரை எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை சீட் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000! -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம்












Click it and Unblock the Notifications