இலங்கை தமிழர்களுக்கு அதிகார பகிர்வளிக்க நடவடிக்கை: ஜெயலலிதாவுக்கு பிரதமர் கடிதம்
Subscribe to Oneindia Tamil

இலங்கையில் வாழும் தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கும் அந்நாட்டு அரசின் 13வது சட்டதிருத்தம் குறித்து முதல்வர் ஜெயலலிதா பிரதமர் மன்மோகன் சிங்கிற்கு கடிதம் எழுதினார். அந்த கடிதத்திற்கு பிரதமர் இன்று பதில் கடிதம் அனுப்பி வைத்துள்ளார்.
அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது,
இலங்கை தமிழர்களுக்கு அதிகாரப் பகிர்வு அளிக்கப்பட வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. இலங்கை தமிழர்கள் சுய கவுரவத்துடன் வாழ அரசு நடவடிக்கை எடுக்கும். மேலும், ஒன்றுபட்ட இலங்கையில் தமிழர்களுக்கு சமஉரிமை, அதிகாரம் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications