சென்னையில் துபாய் வர்ஷா ஜெகன்னநாதனின் பரதநாட்டிய அரங்கேற்றம்
சென்னை: துபாயில் வசித்து வரும் வர்ஷா ஜெகன்னாதன் தனது பரதநாட்டிய அரங்கேற்றத்தை சென்னையில் நடத்தவுள்ளார்.
பிரபல பரதநாட்டியக் கலைஞர் மீரா ஸ்ரீகாந்த்தின் சிஷ்யை ஆவார் வர்ஷா. பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்றுள்ள வர்ஷா முதல் முறையாக சென்னையில் தனது அரங்கேற்றத்தை நடத்துகிறார்.

நிருத்யகங்கனா நடனப் பள்ளி
மீரா ஸ்ரீகாந்த், நிருத்யகங்கனா நடனப் பள்ளியை நிறுவி அதன் இயக்குநராக திகழ்கிறார்.அவர் மோகினியாட்டம், பரதநாட்டியத்தில் பிரபலமாக இருப்பவர் ஆவார்.

நிந்திதா நாயிகி கைகேயி
துபாய் இந்தியன் பள்ளியில் 9ம் வகுப்பு படித்து வருகிறார் வர்ஷா. தனது 6 வயது முதலே பரதநாட்டியம் கற்று வருகிறார். நிந்திதா நாயிகி கைகேயி என்ற பரதநாட்டிய பாலட் டான்ஸ் ஆடிய அனுபவம் கொண்டவர் வர்ஷா.

விவேக் 150
விவேகானந்தரின் 150வது பிறந்த நாளையொட்டி நடத்தப்பட்ட விவேக் 150 என்ற நிகழ்ச்சியிலும் கலந்து கொண்டு ஆடியுள்ளார்.

துபாய் சித்திரைத் திருவிழா
துபாய் லேடீஸ் சர்க்கிள் நடத்திய சித்திரைத் திருவிழாவிலும் இவரது நடனம் இடம் பெற்றுள்ளது.

அரங்கேற்றம்
ஆகஸ்ட் 2ம் தேதி வெள்ளிக்கிழமையன்று மாலை 6.15 மணியளவில் சென்னை தி. நகர், ஓபுல் ரெட்டி ஹாலில் வர்ஷாவின் பரதநாட்டிய அரங்கேற்றம் நடைபெறுகிறது.

சிறப்பு விருந்தினர் சச்சு
நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்தின் செயலாளர், நடிகை சச்சு கலந்து கொள்கிறார்.












Click it and Unblock the Notifications